சட்டுன்னு செய்ய இந்த சட்னி... அதுவும் தள்ளுவண்டி கடை ஸ்டைலில்; இட்லி, தோசைக்கு அப்படி இருக்கும்: நீங்களும் ட்ரை பண்ணுங்க!
தள்ளுவண்டி கடை ஸ்டைலில் சுவையான தக்காளி சட்னி எவ்வாறு செய்யலாம் என்று இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம். இதனை சுமார் 15 நிமிடங்களில் எளிதாக செய்ய முடியும்.
தள்ளுவண்டி கடை ஸ்டைலில் சுவையான தக்காளி சட்னி எவ்வாறு செய்யலாம் என்று இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம். இதனை சுமார் 15 நிமிடங்களில் எளிதாக செய்ய முடியும்.
என்ன தான் வீட்டில் வகை வகையான சாப்பாடு செய்தாலும், சில சமயங்களில் தள்ளுவண்டி கடைகளில் கிடைக்கும் உணவுகளின் ருசி இருக்காது. அந்த வகையில், டேஸ்டியான தள்ளுவண்டி கடை ஸ்பெஷல் தக்காளி சட்னி எப்படி செய்யலாம் என்று இதில் காணலாம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
காய்ந்த மிளகாய் - 10 (வெதுவெதுப்பான நீரில் ஊறவைக்கவும்), பெரிய வெங்காயம் - 1, நாட்டு தக்காளி - 4, பூண்டு - 5 - 6 எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் - 2 (நறுக்கிய துண்டுகளாக எடுத்துக் கொள்ளவும்), தண்ணீர் - இரண்டு கிளாஸ் இட்லி மாவு - 1 கரண்டி மற்றும் கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி
செய்முறை:
Advertisment
Advertisements
வெங்காயம் மற்றும் தக்காளியை பெரிய துண்டுகளாக நறுக்கவும். அதோட ஊறவைத்த காய்ந்த மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்க வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். இதில், கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், தக்காளி பேஸ்ட் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். இது சட்னி பதத்திற்கு வரும் வரை வேக வைக்க வேண்டும்.
இதையடுத்து, இரண்டு கிளாஸ் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து மீண்டும், மிதமான சூட்டில் வேக வைக்க வேண்டும். பிறகு, ஒரு கரண்டி இட்லி மாவு சேர்த்து கட்டி இல்லாமல் கிளறவும். இதுதான் சட்னிக்கு ஸ்பெஷல் டேஸ்ட் கொடுக்கும்.
இறுதியாக, சட்னி இரண்டு நிமிடங்கள் கொதித்த பின்னர் கொத்தமல்லி இலைகள் தூவி பரிமாறலாம்.