/tamil-ie/media/media_files/uploads/2023/01/images-60.jpg)
சர்க்கரை நோய் ஏற்படாமல் நம்மை காப்பாற்ற ஒரு வழிதான் இருக்கிறது. அது தினமும் நாம் சாப்பிடும் சர்க்கரை அளவை குறைத்து கொள்வதுதான். இந்நிலையில் நாம் நேரடியாகவும், மறைமுகமாகவும் எடுத்துகொள்ளும் சர்க்கரைதான் டைப் 2 சர்க்கரை நோய் ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது.
நாம் டீ அல்லது காப்பியில் சர்க்கரை சேர்த்து குடிப்பதை நிறுத்த வேண்டும். தாகம் எடுக்கும்போது தண்ணீர் குடிப்பதை ஊக்குவித்து, இனிப்பு கலந்த குளிர்பானம், ஜூஸ் குடிப்பதை கைவிட வேண்டும். கலர் சேர்த்த இனிப்புகளை சாப்பிடாமல், டிரை ஃபுரூட்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் நாம் உணவில் ஒலிந்திருக்கும் இனிப்பை நாம் கண்டுகொள்ளாமல் தவறவிடுகிறோம். நாம் சாப்பிடும் ஸ்வீட், சாக்லேட், பிஸ்கட், குளிர்பானம் ஆகியவற்றில் அதிக அளவில் சர்க்கரை இருக்கிறது.
ஒரு கிராம் சர்க்கரை 4000 கலோரிகளை கொண்டது. இதனால் நீங்கள் வாங்கும் உணவு பொருள்களின் லேபிலை பார்த்து வாங்க வேண்டும்.
கூடுதலாக வெள்ளை சர்க்கரை தவிர்த்துவிட்டு வெல்லம், தேன் சேர்த்து சாப்பிடலாம் என்று நீங்கள் நினைத்தாலும், அதற்கு எந்த பயனும் இல்லை. இது மூன்றும் உங்கள் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கவே போகிறது.
சர்க்கரை நோய் நிபுணர் மருத்துவர் மோகன் கூறுகையில் குழந்தைகளின் பல் ஆரோக்கியத்திற்கும் சர்க்கரை எடுத்துக்கொள்ளும் அளவிற்கு தொடர்பு இருக்கிறது. சர்க்கரை எடுத்துக்கொண்டால், நிச்சயம் உடல் பருமன், டைப் 2 சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்று அவர் கூறுகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.