5 டம்ளர் அரிசிக்கு இவ்வளவு உளுந்து போதும்... புசு புசு இட்லி சுட்டுத் தள்ளலாம்; இப்படி ட்ரை பண்ணுங்க!
வீட்டில் இட்லி சுடும்போது கல்லு மாதிரி, களி மாதிரி வருகிறதா? கவலைப்படாதீர்கள், புசு புசுவென சாஃப்ட் இட்லி செய்வதற்கான டிப்ஸ் தருகிறோம். உங்கள் வீட்டில் நீங்களே புசு புசு இட்லி செய்யலாம். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள்.
வீட்டில் இட்லி சுடும்போது கல்லு மாதிரி, களி மாதிரி வருகிறதா? கவலைப்படாதீர்கள், புசு புசுவென சாஃப்ட் இட்லி செய்வதற்கான டிப்ஸ் தருகிறோம். உங்கள் வீட்டில் நீங்களே புசு புசு இட்லி செய்யலாம். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள்.
வீட்டில் புசுபுசுவென இட்லி செய்வது எப்படி என்று டீ கடை கிச்சன் யூடியூப் சேனலில் செய்து காட்டியுள்ளனர். புசுபுசுவென இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
வீட்டில் இட்லி சுடும்போது கல்லு மாதிரி, களி மாதிரி வருகிறதா? கவலைப்படாதீர்கள், புசு புசுவென சாஃப்ட் இட்லி செய்வதற்கான டிப்ஸ் தருகிறோம். உங்கள் வீட்டில் நீங்களே புசு புசு இட்லி செய்யலாம். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள்.
Advertisment
வீட்டில் புசுபுசுவென இட்லி செய்வது எப்படி என்று டீ கடை கிச்சன் யூடியூப் சேனலில் செய்து காட்டியுள்ளனர். புசுபுசுவென இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
புசு புசு இட்லி செய்முறை
Advertisment
Advertisements
உங்கள் வீட்டில் இட்லி செய்யும்போது, இட்லி புசுபுசுவென சாஃப்ட்டாக இருக்க வேண்டுமா? அதற்கு அரசி எடுத்துக்கொள்ளும் விகிதம் ரொம்ப முக்கியமானது. அதனால், இட்லி செய்வதற்கு கடையில் விற்கப்படும் குண்டு அரிசி வாங்கிக்கொள்ளுங்கள். 5 டம்ப்ளர் அரிசி எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 1 டீஸ்பூன் உப்பு போட்டு நன்றாகக் கழுவிக் கொள்ளுங்கள். அதன் பிறகு, 2-3 முறை நன்றாகக் கழுவிக்கொள்ளுங்கள். பிறகு தண்ணீர் ஊற்றி ஊற வையுங்கள்.
அதே போல, அரிசி எடுத்த அதே டம்ப்ளரில் உளுந்து பருப்பு எடுத்துக்கொள்ளுங்கள். உளுத்தம் பருப்பை 2-3 முறை நன்றாகக் கழுவி எடுத்துக்கொள்ளுங்கள். தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு, தாராளமாக தண்ணீர் ஊற்றி அதை எடுத்து ஃபிரிட்ஜில் வைத்து 3 மணி நேரம் ஊற வையுங்கள். இந்த தண்ணீரை அரைக்கும்போது பயன்படுத்த வேண்டும்.
அடுத்து, கால் டம்பளர் அளவு ஜவ்வரிசி எடுத்து தனியாக 3 மணி நேரம் ஊற வையுங்கள்.
நன்றாக ஊறிய பிறகு, கிரைண்டரில் அரைக்க வேண்டும். முதலில் ஊற வைத்த உளுந்து எடுத்து கிரைண்டரில் போட்டு அரையுங்கள், 2 நிமிடம் கழித்து ஊறவைத்த ஜில் தண்ணீரை ஊற்றி பொங்க பொங்க கிரீம் போல அரைத்து மாவை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்து, ஊற வைத்த ஜவ்வரிசியை எடுத்து அரையுங்கள். அதன்பிறகு, அரிசியைப் போட்டு அரையுங்கள். அரிசியை மாவாக அரைக்கும்போது ரவையைவிட சற்று பொடிசான பதத்தில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். 1 டீஸ்பூன் உப்பு போட்டு உளுந்து மாவு, அரிசி மாவு இரண்டையும் நன்றாக கலந்து கரைத்து விடுங்கள். பிறகு, அப்படியே மூடி வைத்துவிடுங்கள்.
காலையில் திறந்து பார்த்தால், மாவு நன்றாக புளித்து இருக்கும். மாவை நன்றாக கரைத்துக்க்கொள்ளுங்கள். 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்றாகக் கரைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது அடுப்பில் இட்லி குண்டானை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கொதிக்க வையுங்கள். தண்ணீர் கொதித்த பிறகு, இட்லி தட்டில் துணி போட்டு அல்லது எண்ணெய் தடவி மாவு ஊற்றி இட்லி குண்டானில் வைத்து மூடிவிடுங்கள். இட்லி வெந்த பிறகு இறக்கி எடுத்துப் பாருங்கள், இட்லி புசு புசு என்று வந்திருக்கும். அவ்வளவுதான் புசு புசுவென சாஃப்ட் இட்லி ரெடி, சட்னி, சாம்பார் என்று சாப்பிடலாம். இந்த முறையில் நீங்களும் உங்கள் வீட்டில் புசு புசு இட்லியை சுட்டுத்தள்ளலாம், ட்ரை பண்ணி பாருங்கள்.