/indian-express-tamil/media/media_files/2025/09/29/chutny-2025-09-29-16-04-04.jpg)
5 பூண்டு, ஒரு துண்டு இஞ்சி... 5 நிமிசத்துல தண்ணி சட்னி; ஈஸி டிப்ஸ்!
தினமும் காலையில் டிபனிற்கு என்ன செய்யலாம் என்ன சட்னி செய்யலாம் என்று யோசித்து யோசித்து சலிப்பாக இருக்கிறதா. இனி அந்த கவலைய விடுங்க ஐந்து நிமிடத்தில் இஞ்சி, பூண்டு வைத்து ஈஸியா ஒரு சட்னி செய்யலாம்.
பூண்டில் உள்ள சத்துக்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, சளி மற்றும் காய்ச்சல் போன்ற நோய்கள் வராமல் தடுக்க உதவும். ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவும். உணவில் பூண்டு சேர்த்துக் கொள்வதால் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் குறையும் என்று கூறப்படுகிறது.
அதேபோன்று, இஞ்சி செரிமான மண்டலத்திற்கு மிகவும் நல்லது. இது வாந்தி மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகளைக் குறைக்க உதவும். இஞ்சி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதுவும் சளி, இருமல் மற்றும் தொண்டை வலிக்கு நல்ல மருந்தாகச் செயல்படும்.
இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால், உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டது. மூட்டு வலி மற்றும் தசை வலி உள்ளவர்களுக்கு இது சிறந்த மருந்தாக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படி பல மருத்துவ பயன்கள் கொண்ட இஞ்சி, பூண்டு வைத்து எப்படி சட்னி செய்யலாம் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வெங்காயம்
எண்ணெய்
இஞ்சி
பூண்டு
காய்ந்த மிளகாய்
கொத்தமல்லி
சீரகம்
உடைத்த கடலை
செய்முறை
கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து வெங்காயம், இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் சிறிது கொத்தமல்லி சேர்த்து வதக்க வேண்டும்.
இந்த கலவை நன்கு குளிர்ந்த உடன் சீரகம், உடைத்த கடலை சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதன் மீது கடுகு, கறிவேப்பிலை எல்லாம் போட்டு தளித்து ஊற்றி இறக்கினால் சுவையான சட்னி ரெடி. இந்த சட்னியை நீங்கள் இட்லி, தோசை ஆகியவற்றுடன் வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.