/indian-express-tamil/media/media_files/2025/09/30/kidney-health-2025-09-30-11-27-51.jpg)
நமது உடலின் முக்கிய அங்கமான கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது அத்தியாவசியமானது. கல்லீரல்தான் நம் உடலில் சேரும் நச்சுக்களை வடிகட்டி வெளியேற்றும் அதிமுக்கிய பணியைச் செய்கிறது. எனவே, கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தவும், அதில் சேரும் நச்சுத்தன்மையை நீக்கவும் அவ்வப்போது சுத்தி செய்வது மிகவும் அவசியம். வீரன்வீடு இன்ஸ்டா பக்கத்தில் கல்லீரலுக்கு இயற்கையான முறையில் ஊக்கமளித்து நச்சுக்களை வெளியேற்ற உதவும் ஒரு ஜூஸ் எப்படி செய்வது என்று பார்ப்போம். வாரத்திற்கு இரண்டு முறை இந்த ஜூஸை அருந்துவதன் மூலம், கல்லீரலில் உள்ள என்சைம்கள் உந்தப்பட்டு, உடலின் நச்சுத்தன்மை வெளியேற்றப்படும்.
தேவையான பொருட்கள்:
புதினா இலைகள்
கொத்தமல்லி இலைகள்
பூண்டு பற்கள்
இஞ்சி
உப்பு
செய்முறை:
முதலில், ஒரு மிக்ஸர் ஜாரில் ஒரு கைப்பிடி புதினா இலை, ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலை, மூன்று பற்கள் பூண்டு, மற்றும் தோல் நீக்கிய ஒரு சிறிய துண்டு இஞ்சி ஆகியவற்றைச் சேர்க்கவும். இத்துடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, இந்தக் கலவையை நன்கு அரைத்து ஜூஸ் பதத்திற்கு கொண்டு வரவும்.
அரைக்கப்பட்ட கலவையை ஒரு மெல்லிய வடிகட்டி அல்லது துணியைப் பயன்படுத்தி நன்கு வடிகட்டி, சாற்றை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளவும். சக்கையை அப்புறப்படுத்தவும். பின்னர், வடிகட்டிய சாற்றுடன் சுவைக்காக ஒரு சிட்டிகை அளவு உப்பைச் சேர்த்து நன்கு கலக்கினால், கல்லீரல் சுத்திகரிப்புக்கான ஜூஸ் தயார். இதனை வாரம் இருமுறை கூட குடிக்கலாம்.
இந்த ஜூஸை வாரத்திற்கு இரண்டு நாட்கள் தொடர்ந்து குடித்து வரலாம். இது கல்லீரல் என்சைம்களை சுறுசுறுப்பாக்கி, நச்சுத்தன்மையை இயற்கையாகவே வெளியேற்ற உதவுகிறது, இதனால் உங்கள் கல்லீரல் ஆரோக்கியம் மேம்படும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.