/indian-express-tamil/media/media_files/2025/01/27/bjDpGbo2gzMGlyXxYw3u.jpg)
இந்திய உணவுப்பட்டியலில், மிகவும் முக்கியமான உணவுகளில் ஒன்று பூரி. காலை இரவு என இருவேளையும் சாப்பிடும் அளவுக்கு பலருககும் பிடித்தமான உணவாக இருக்கும் இந்த பூரி, செய்யும்போது அதிக எண்ணெய் இழுக்குமே என்பதால் இதை செய்யும்போதெல்லாம் ஒருவித மன உளைச்சலில் இருப்பார்கள். அதேபோல் பொறித்த உணவு உடலுக்கு சற்று தேவை இல்லாதது என்று கருதி பூரி அதிகம் செய்வதை தவிர்க்கும் குடும்பத்தினரும் இருக்கிறார்கள்.
கோதுமை மாவில் செய்யப்படும் இந்த பூரி தவிர்க்க வேண்டிய உணவுப்பட்டியலில் இல்லை. ஆனாலும் எண்ணெயில் பொறித்தது, அதிக எண்ணெய் குடிக்கிறது என்பதால், உடலுக்கு தீங்கு என்று நினைக்கிறார்கள். ஆனால் பூரி செய்யும்போது அது எண்ணெய் குடிக்காத அளவுக்கு செய்யலாம். இந்த ட்ரிக்ஸ் பலரும் அறியாத ஒரு ட்ரிக்ஸ். என்ன என்று பார்ப்போமா?
பூரிக்கு மாவை பதமாக பிசைந்து, அதை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, வைத்துக்கொண்டு, மாவில் கடலை எண்ணெய் தடவி காயவைக்க வேண்டும். அதன்பிறகு, பூரி மாவை கட்டையில் வைத்து நன்றாக உருட்டி, பொறிக்க தயாராகவும். இதற்காக கடாயில் எண்ணெய் ஏற்றி எண்ணெய் காய்ந்தவுடன், அதில் ஒரு ஸ்பூன் உப்பை சேர்க்கவும். இப்படி செய்யும்போது பூரி எண்ணெய் இழுக்காமல் நன்றாக பொறிந்து வரும்.
எண்ணெய் சூடு ஏறிய பிறகு,உப்பு சேர்த்தால் அது எண்ணெயின் அடர்த்தியை உடைத்துவிடும். இதனால் எண்ணெயின் தன்மை நீர்த்து போகும் என்பதால், பூரி பொறித்து எடுக்கும்பொது அது எண்ணெய் குடிக்காமல் இருக்கும். பூரி எண்ணெய் இழுப்பாமல் இருக்க இப்படி ஒரு டரிக் இருந்தாலும், உப்பு சேர்த்த எண்ணெயின் காரணமாக பூரியில் சுவை மாறவும், உப்பு கருகிப்போய், எண்ணெய் கருப்பாக மாறவும் வாய்ப்பு உள்ளது. ஆனாலும் பூரி என்ணெய் இழுக்காமல் இருக்க வேண்டும் என்று நினைத்தால் இந்த ட்ரிக்ஸை பயன்படுத்துங்கள். பூரிக்கு மட்டும் இல்லாமல் பொறித்து எடுக்கும் மற்ற உணவுகளுக்கும் இதை பயன்படுத்தலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.