/indian-express-tamil/media/media_files/2025/07/25/channa-rice-2025-07-25-09-18-45.jpg)
மதிய உணவுக்காக தினமும் என்ன சமைப்பது என்று யோசிக்கும் சைவப் பிரியர்களுக்கு, அதிகப் புரதச்சத்து நிறைந்த, அதேசமயம் மிகவும் சுவையான ஒரு ரெசிபி இதோ. வெறும் காய்கறி பிரியாணி அல்லது மஷ்ரூம் பிரியாணி போல இல்லாமல், மசாலாக்களை பிரெஷ்ஷாக அரைத்துச் செய்யப்படும் இந்த 'கொண்டைக்கடலை பிரியாணி' உங்கள் லஞ்ச் மெனுவை அட்டகாசமாக மாற்றும்.
கொண்டைக்கடலையானது புரதத்தின் சிறந்த மூலமாக இருப்பதால், இது உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கவும் உதவுகிறது. இதில் தேங்காய்ப் பால் சேர்ப்பதால் சுவையும் மணமும் கூடும். மிகவும் எளிமையான இந்த சமையல் குறிப்பைப் பின்பற்றி நீங்களும் ஆரோக்கியமான கொண்டைக்கடலை பிரியாணியை சில நிமிடங்களில் செய்து அசத்தலாம். இதனை எப்படி செய்யலாம் என்று ட்ரடிஷனலி மாடர்ன்ஃபுட் இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
காஞ்ச மிளகாய் - 8
இஞ்சி மற்றும் பூண்டு - சிறிது
ஊறவைத்து வேகவைத்த கொண்டைக்கடலை - 1 கப்
பாஸ்மதி அரிசி - 2 கிளாஸ்
வெங்காயம் (பெரியது) - 2
தக்காளி (நடுத்தரம்) - 3
பச்சை மிளகாய் - 3
புதினா இலை
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
பிரியாணி இலை, பட்டை, கிராம்பு
உப்பு
தண்ணீர் (கடலை வேக வைத்தது) - 2 கிளாஸ்
தேங்காய்ப்பால் - 1 கிளாஸ்
செய்முறை:
முதலில், அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ள சீரகம், மிளகு, காஞ்ச மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை லேசாக வறுத்து, தண்ணீர் சேர்க்காமல் பொடியாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு குக்கரில் 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் மற்றும் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி சூடேற்றவும். பட்டை, கிராம்பு உள்ளிட்ட பட்ட வகைகளைச் சேர்த்துத் தாளித்த பின், நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானதும், நடுத்தர அளவிலான மூன்று தக்காளியைச் சேர்த்து, அது நன்றாக மசிந்து வரும் வரை வதக்கவும். அதன் பிறகு, ஒரு கைப்பிடி புதினா இலைகளைச் சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள் வதக்கவும். இப்போது, நாம் அரைத்து வைத்திருக்கும் ஃப்ரெஷ் மசாலா பொடியைச் சேர்க்கவும். மசாலாவின் பச்சை வாசனை நீங்கி, எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளவும். பின்னர், வேகவைத்த கொண்டைக்கடலையை இதனுடன் சேர்த்து ஒருமுறை வதக்கி விடவும்.
2 கிளாஸ் பாஸ்மதி அரிசிக்கு மொத்தம் 3 கிளாஸ் தண்ணீர் தேவை. அதில், கொண்டைக்கடலை வேக வைத்த தண்ணீர் 2 கிளாஸ் மற்றும் 1 கிளாஸ் தேங்காய்ப்பால் என்ற விகிதத்தில் ஊற்றவும். தேவையான அளவு உப்பு சேர்த்து, ஊறவைத்த பாஸ்மதி அரிசியைச் சேர்த்து மெதுவாகக் கிளறவும். குக்கரை மூடி, இரண்டு விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும். பிரஷர் முழுமையாக அடங்கிய பின் திறந்து பரிமாறினால், சுவையான மற்றும் சத்தான கொண்டைக்கடலை பிரியாணி தயார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.