/indian-express-tamil/media/media_files/2025/04/17/8Sm0JTAWjnexpDPJgWpN.jpg)
பஞ்சு போன்ற மென்மையான இட்லி என்பது பலருக்கும் ஒரு சவாலான விஷயம். ஆனால் சரியான விகிதத்தில் அரிசி, உளுந்து சேர்த்து மாவு தயார் செய்தால், எல்லோராலும் சுவையான, சாஃப்ட் இட்லி செய்ய முடியும். இந்த எளிதான குறிப்புகளைப் பின்பற்றி, நீங்களும் உங்கள் வீட்டில் பஞ்சு போன்ற இட்லி செய்து அசத்தலாம். இதனை எப்படி செய்வது என்று சுதாஜி சேனல் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி: 4 டம்ளர்
உளுந்து: 1½ டம்ளர்
வெந்தயம்: 2 ஸ்பூன்
உப்பு: தேவையான அளவு
செய்முறை:
முதலில், இட்லி அரிசியையும் வெந்தயத்தையும் ஒன்றாகச் சேர்த்து, 8 மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும். இது இட்லிக்கு தேவையான மென்மையைக் கொடுக்கும். பிறகு, ஒன்றரை டம்ளர் உளுந்தை மட்டும் தனியாக அரை மணி நேரம் ஊற வைக்கவும். உளுந்து அதிகமாக ஊறினால், இட்லி மாவு புளிப்பதற்கு அதிக நேரம் எடுக்கும்.
இட்லி ஊற்றுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன், ஊற வைத்த உளுந்தை கிரைண்டரில் போட்டு, பஞ்சு போல மென்மையாக அரைக்கவும். இந்த மாவை அரிசி மாவுடன் கலந்து ஒரு மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். இப்போது, ஒரு கிண்ணத்தில், மாவு, உப்பு, மற்றும் கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கவும். மாவு கெட்டியாக இருந்தால், சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கவும். மாவு மிகவும் நீராக இருக்கக்கூடாது.
இட்லி தட்டில் மாவை ஊற்றி, அடுப்பில் வைத்து, மூடி வைக்கவும். 15-20 நிமிடங்கள் வரை இட்லியை வேக வைக்கவும். இட்லி பஞ்சு போன்று வெந்ததும், அடுப்பிலிருந்து இறக்கி, சூடாக பரிமாறவும். மாவு அரைக்கும்போது, சரியான விகிதத்தில் அரிசியும் உளுந்தும் சேர்ப்பது மிகவும் முக்கியம். இது இட்லிக்கு சரியான அமைப்பைக் கொடுக்கும். அரைத்த மாவு புளிப்பதற்கு சரியான நேரம் கொடுப்பது, இட்லியின் சுவைக்கு மிகவும் அவசியம். இந்த செய்முறையை பின்பற்றி செய்தால் பஞ்சுபோன்ற இட்லி கிடைக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.