/indian-express-tamil/media/media_files/2025/09/28/sundaikai-2025-09-28-10-40-02.jpg)
ரத்தம் கம்மியா இருக்கா? இந்த கூட்டு கொஞ்சம் மட்டும் சாப்பிட்டு பாருங்க!
இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில், பலருக்கும் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனை ரத்த சோகை. சத்தான உணவுகள் இல்லாதது, இரும்புச்சத்து குறைபாடு, மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பல காரணங்களால் ரத்த சோகை ஏற்படுகிறது.
இது, உடல் சோர்வு, தலைசுற்றல், மற்றும் உடல் பலவீனம் போன்ற பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ரத்த சோகை என்றதும் நாம் உலர்ந்த பழங்களை வாங்கி சாப்பிட சொல்கிறோம். ஆனால், அதற்கு நிகரான சத்துக்கள் சுண்டைக்காயில் உள்ளது.
சுண்டைக்காயில் பல நன்மைகள் நிறைந்திருக்கிறது. இதில் அதிகப்படியான இரும்பு சந்து நிறைந்திருப்பதால் ரத்த சோகைக்கு மிகவும் நல்லது. கர்ப்பப்பை கட்டி, முறையில்லாத மாதவிடாய், தைராய்டு போன்ற நோய்கள் சுண்டைக்காய் அடிக்கடி சாப்பிடும் போது குணமடைகிறது.
சுண்டைக்காயை வாரத்திற்கு ஒருமுறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. இப்படி பல சத்துக்கள் நிறைந்த சுண்டைக்காயை வைத்து எப்படி ருசியான துவையல் செய்யலாம் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சுண்டைக்காய்
கடலை பருப்பு
உளுந்து
எண்ணெய்
காய்ந்த மிளகாய்
பூண்டு
தேங்காய்
புளி
கறிவேப்பிலை
செய்முறை
சிறிதளவு சுண்டைக்காயை நன்றாக இடித்து எடுத்துக் கொள்ளவும். இதனை ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ளவும். மற்றொரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பருப்பு, உளுந்து, பூண்டு, காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
இதனுடன் இடித்த சுண்டைக்காயை சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் சிறிது துருவிய தேங்காய் மற்றும் புளி சேர்த்து அரைத்து எடுத்தால் சுவையான சுண்டைக்காய் துவையல் ரெடி. இதன் மீது கடுகு, காய்ந்த மிளகாயை தாளித்து ஊற்றி தோசை, இட்லிக்கு வைத்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.