/indian-express-tamil/media/media_files/2025/09/05/chutney-2025-09-05-13-17-04.jpg)
அவசரமான நேரங்களில், சுவையான உணவை சமைக்க நினைத்தால், அதற்கு நேரமும், அதிக பொருட்களும் தேவைப்படும் என சமையல் அறைக்குள் நுழையவே தயங்குபவர்கள் பலர். ஆனால், சில எளிமையான பொருட்களுடன், குறைந்த நேரத்தில் அசத்தலான சுவையில், இட்லி, தோசை, போன்ற உணவுகளுடன் கலந்து சாப்பிட அருமையான சட்னி ஒன்றை செய்து விடலாம். இந்த சட்னியை செய்வது மிகவும் எளிது, மேலும் இது ஒரு காரசாரமான சுவையைத் தரும். இதனை எப்படி செய்வது என்று சிந்துவின் சுவை இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய்
காய்ந்த மிளகாய்
நடுத்தர அளவு வெங்காயம், நறுக்கியது
இஞ்சி
பூண்டு
பச்சை மிளகாய்
நடுத்தர அளவு தக்காளி, நறுக்கியது
கறிவேப்பிலை
ஒரு கைப்பிடி புதினா இலைகள்
மிளகாய் தூள்
உப்பு
தண்ணீர்
செய்முறை:
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் காய்ந்த மிளகாய் மற்றும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு, இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும். அடுத்து, நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு கலக்கவும். தக்காளி சற்று வதங்கியதும், கறிவேப்பிலை மற்றும் ஒரு கைப்பிடி புதினா இலைகளை சேர்க்கவும்.
இப்போது, சுவைக்கு ஏற்ப மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். அனைத்து பொருட்களும் நன்கு வதங்கியதும், அடுப்பை அணைத்து கலவையை முழுமையாக ஆற விடவும். ஆறிய கலவையை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு, மென்மையான விழுது போல அரைக்கவும். இந்த சட்னியை நீங்கள் விரும்பிய பதத்தில் வைத்துக் கொள்ளலாம்.
இந்த எளிமையான செய்முறையின் மூலம், உங்கள் வீட்டிலேயே தேநீர் கடை சட்னியின் சுவையை அனுபவிக்கலாம். இந்த சுவையான சட்னிக்கு கடுகு, உளுத்தம் பருப்பு போன்றவற்றை போட்டு தாளிக்க தேவையில்லை. இந்த எளிய முறையில் சட்னியை செய்து அசத்தலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு செய்யும்போது காரம் குறைவாக செய்யலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.