டீ கடை ஸ்டைல் கார வடை... மாவு அரைக்கும்போது இது முக்கியம்: இப்படி செஞ்சு அசத்துங்க!
டீக்கடையில் ஸ்டைலில் கார வடையை வீட்டிலேயே செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் காணலாம். இதனை மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். அப்படி இருக்கும் இதன் சுவை..!
டீக்கடையில் ஸ்டைலில் கார வடையை வீட்டிலேயே செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் காணலாம். இதனை மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். அப்படி இருக்கும் இதன் சுவை..!
டீக்கடையில் ஸ்டைலில் கார வடையை வீட்டிலேயே செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் காணலாம். இதனை மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். அப்படி இருக்கும் இதன் சுவை..!
Advertisment
தேவையான பொருட்கள்:
பட்டாணி பருப்பு - 250 கிராம் உளுந்தம் பருப்பு - 50 கிராம் உப்பு - ½ டீஸ்பூன் சீரகம் - ½ டீஸ்பூன் பெருஞ்சீரகம் - ½ டீஸ்பூன் பெரிய வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 4 இஞ்சி - சிறிதளவு பூண்டு - 6 பல் மல்லி இலை - 1 கொத்து கருவேப்பிலை - சிறிதளவு பெருங்காயத்தூள் - ½ டீஸ்பூன் அரிசி மாவு - 2 டீஸ்பூன்
செய்முறை:
Advertisment
Advertisements
கார வடைக்கு முதலில் பட்டாணி பருப்பு – 250 கிராம், உளுத்தம் பருப்பு – 50 கிராம், இரண்டையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த 2 பருப்பு வகைகளை ஒன்றாக ஒரு பவுலில் போட்டு நன்றாக 3 முறை கழுவி விடவேண்டும். அதன் பின்பு நல்ல தண்ணீரை ஊற்றி 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். (எல்லோருக்கும் நன்றாகத் தெரிந்திருக்கும். பட்டாணி பருப்பு வேறு. கடலைப்பருப்பு வேறு. கடலைப்பருப்பை பயன்படுத்தி இந்த காரவடையை செய்யக்கூடாது. பட்டாணி பருப்பில் தான் செய்ய வேண்டும். அப்போது தான் நல்ல ருசி கிடைக்கும்.)
பட்டாணி பருப்பு உளுந்தம் பருப்பு நன்றாக ஊறிய பின்பு, அதில் இருக்கும் தண்ணீரை சுத்தமாக வடித்து விடுங்கள். அதன் பின்பு கிரைண்டரில் போட்டு 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி, 10 நிமிடம் போல அரைத்தால் மாவு புசுபுசுவென பொங்கி மைய அரைந்து வந்து விடும். மிக்சியிலும் இந்த மாவைப் போட்டு அரைத்துக் கொள்ளலாம். ஆனால் கிரைண்டரில் அரைக்கும்போது மாவு சீக்கிரமாக அரையும். அதேசமயம் புசுபுசுவென பொங்கி உபரி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. மாவு, போண்டா மாவு பதத்திற்கு நன்றாக கெட்டியாக அரைந்து வந்ததும், கிரைண்டரில் இருந்து வழித்து மாவை தனியாக ஒரு பௌலில் மாற்றிக் கொள்ளுங்கள்.
இந்த மாவுடன் 2 டேபிள்ஸ்பூன் அரிசி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லித்தழை தேவையான அளவு, பொடியாக நறுக்கிய – இஞ்சி 2 ஸ்பூன், தேவையான அளவு உப்பு, இந்தப் பொருட்களைப் போட்டு மாவை நன்றாக கலந்து கொள்ளுங்கள். மாவை கைகளால் அள்ளி அப்படியே போண்டா போல எண்ணெயில் விடவேண்டும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக சூடு செய்து கொள்ள வேண்டும். எண்ணெய் சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொண்டு, இந்த மாவிலிருந்து சிறிய சிறிய உருண்டைகளாக எடுத்து எண்ணெயில் போட வேண்டும். கையில் மாவு இலேசாக ஒட்டும். கையில் கொஞ்சம் தண்ணீரைத் தொட்டுக்கொண்டு மாவை கொஞ்சம் போல உருட்டி எடுத்து எண்ணெயில் விடுங்கள்.
போண்டா மிதமான தீயில் சிவந்து வரும். மேலே மொறுமொறுவென இருக்கும். உள்ளே சாப்டாக இருக்கும். மேலே பொன்னிறமாக சிவந்து வந்தவுடன், எண்ணெயின் சிடசிடப்பு அடங்கியவுடன் போண்டாவை எடுத்து விடுங்கள். இதை அப்படியே சுட சுட சாப்பிடுவதற்கு அத்தனை ருசியாக இருக்கும். ஒரு டம்ளர் டீ கூட 2 போண்டா சாப்பிட்டு பாருங்க. சொல்ல வார்த்தை ஏது. ஒருவேளை மாவு அரைக்கும் போது உங்களுக்கு தண்ணீர் ஆகிவிட்டால் என்ன செய்வது. பயப்பட வேண்டாம். அரிசி மாவை கொஞ்சம் கூடுதலாக சேர்த்து இந்த வடையை சுட்டு எடுத்து கொள்ளலாம். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா உங்க வீட்ல மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.