Advertisment

5 நிமிசத்துல 500 உளுந்த வடை... ஒரு தேங்காய் சிரட்டை போதும்!

தேங்காய் சிரட்டையை வைத்து 5 நிமிடத்தில் 500 உளுந்து வடைகளை செய்யலாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? வாருங்கள் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
உளுந்து வடை

உளுந்து வடை

உளுந்துவ வடை சுடும்போது நடுவில் போடும் ஓட்டை சரியாக வரவில்லை? மாவு எண்ணெயில் கரையும் பதத்தில் வருகிறதா? இல்லை மாவு திரட்டி எண்ணெயில் போட முடியவில்லையா? இனி கவலை வேண்டாம். இந்த ஒரு டிப்ஸ் போதும் நல்ல சுவையான உளுந்தவடை செய்வதற்கு.

Advertisment

தேவையான பொருட்கள்

உளுந்தம் பருப்பு 
சின்ன வெங்காயம் 
பச்சை மிளகாய்  
கறிவேப்பிலை  
உப்பு  
மல்லி இலை 
சமையல் எண்ணெய்  
தேங்காய் ஓடு

செய்முறை

Advertisment
Advertisement

உளுந்தம் பருப்பினை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் கழுவி கிரைண்டரில் இட்டு கெட்டியாகவும் மையாகவும் ஆட்டவும்.

மாவினை அரைக்கும் போது சிறிதளவு தண்ணீரை தெளித்துக் கொண்டே அரைக்க வேண்டும். மாவில் சிறிதளவினை எடுத்து தண்ணீரில் போட்டால் அது மிதக்கும். இதுவே மாவினை வெளியே எடுக்க தேவையான பதம் ஆகும்.

அட இவ்ளோ நாளும் இந்த சீக்ரெட் தெரியாம போச்சே

மாவினை கரைப்பதற்கு முன்பு சிறிதளவு உப்பினைச் சேர்க்கவும். ஒரு பாத்திரத்தில் மாவுடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லி இலை ஆகியவற்றை சேர்த்து கரைக்கவும்.

கடாயில் எண்ணெயை ஊற்றி காய விடவும் பின்னர் ஒரு தேங்காய் ஓடு எடுத்து அதன் பின்பக்கம் தண்ணீரில் நனைத்து அதன்மேல் மாவை வைத்து வடைப்போல் திரட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். 

மாவு கரையாமல் அழகான சுவையான மெதுவடை கிடைக்கும்.

Cooking Tips
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment