சோறு மீந்துபோனா கவலை வேண்டாம்… பஞ்சு போல் இட்லி இப்படி செய்யலாம்!

மீதமான சாதத்தில் இருந்து எப்படி இட்லி செய்யலாம் என்று இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம். இதன் வழிமுறைகள் சுலபமாக இருப்பதால் எல்லோராலும் எளிமையாக செய்ய முடியும்.

மீதமான சாதத்தில் இருந்து எப்படி இட்லி செய்யலாம் என்று இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம். இதன் வழிமுறைகள் சுலபமாக இருப்பதால் எல்லோராலும் எளிமையாக செய்ய முடியும்.

author-image
WebDesk
New Update
Idly preparation

தினசரி வீட்டில் என்ன சமையல் செய்யலாம் என்று குழப்பம் இருக்கும். ஆனால், அதை விட குழப்பமான ஒரு விஷயம் இருக்கிறது. குறிப்பாக, மீதமான சாதத்தை என்ன செய்வது என்ற குழப்பம் அதை விட அதிகமாக இருக்கும்.

Advertisment

அந்த வகையில் மீதமான சாதத்தில் இருந்து சிலர் வடாம் செய்வார்கள். ஆனால், மீதமான சாதத்தைக் கொண்டு டிஃபனுக்காக இட்லி செய்வது அதை விட சுலபமாக இருக்கும். இதற்கான செய்முறை விளக்கத்தை தற்போது காணலாம்.

தேவையான பொருட்கள்:

சாதம்,
தண்ணீர்,
ரவை,
தயிர் மற்றும்
உப்பு

Advertisment
Advertisements

செய்முறை:

ஒரு கப் சாதம் மற்றும் அதே அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். இதனை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளலாம். இப்போது, ஒரு கப் ரவையை லேசாக வறுத்து, முதலில் அரைத்து வைத்த மாவுடன் சேர்த்து கலக்க வேண்டும்.

இந்தக் கலவையுடன் ஒரு கப் தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் கலக்க வேண்டும். அதன்படி, இந்த மாவில் கட்டி விழாமல் கலந்த பின்னர், சுமார் 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

இறுதியாக கால் ஸ்பூன் அளவிற்கு ஆப்ப சோடா கலந்து இட்லி சுட்டு எடுக்கலாம். இதுவும் சாதாரண அரிசி மாவில் செய்த இட்லி போன்று சாஃப்டாக இருக்கும்.

Food

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: