தினசரி வீட்டில் என்ன சமையல் செய்யலாம் என்று குழப்பம் இருக்கும். ஆனால், அதை விட குழப்பமான ஒரு விஷயம் இருக்கிறது. குறிப்பாக, மீதமான சாதத்தை என்ன செய்வது என்ற குழப்பம் அதை விட அதிகமாக இருக்கும்.
அந்த வகையில் மீதமான சாதத்தில் இருந்து சிலர் வடாம் செய்வார்கள். ஆனால், மீதமான சாதத்தைக் கொண்டு டிஃபனுக்காக இட்லி செய்வது அதை விட சுலபமாக இருக்கும். இதற்கான செய்முறை விளக்கத்தை தற்போது காணலாம்.
தேவையான பொருட்கள்:
சாதம்,
தண்ணீர்,
ரவை,
தயிர் மற்றும்
உப்பு
செய்முறை:
ஒரு கப் சாதம் மற்றும் அதே அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். இதனை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளலாம். இப்போது, ஒரு கப் ரவையை லேசாக வறுத்து, முதலில் அரைத்து வைத்த மாவுடன் சேர்த்து கலக்க வேண்டும்.
இந்தக் கலவையுடன் ஒரு கப் தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் கலக்க வேண்டும். அதன்படி, இந்த மாவில் கட்டி விழாமல் கலந்த பின்னர், சுமார் 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
இறுதியாக கால் ஸ்பூன் அளவிற்கு ஆப்ப சோடா கலந்து இட்லி சுட்டு எடுக்கலாம். இதுவும் சாதாரண அரிசி மாவில் செய்த இட்லி போன்று சாஃப்டாக இருக்கும்.