இட்லிக்கு மாவு அரைப்பது என்பது சவாலான ஒன்று தான். அதனாலேயே பலரும் இட்லி மாவு அரைப்பது இல்லை. கடைகளில் மாவு வாங்கி பயன்படுத்தி கொள்கிறார்கள்.
Advertisment
அதேபோல தான் இட்லி மாவு பொறுத்து தான் இட்லி வரும். இட்லி பஞ்சு மாதிரி துணியில் ஒட்டாமல் வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சால்ஹாஸ் கிச்சன் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம். மாவு அரைக்க தெரியாதவர்கள் கூட இந்த முறையில் மாவு அரைத்தால் நன்றாக இருக்கும்.
ரேஷன் அரிசி, பச்சரிசி ஆகியவற்றை எடுத்து கழுவி ஊறவைக்கவும். பின்னர் அதே அளவு கப்பில் முக்கால் அளவு உளுந்து ஒரு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து ஊற வைக்கவும்.
பின்னர் உளுந்தை பஞ்சு மாதிரி அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். அடுத்ததாக அரிசியை நன்கு அரைத்து இரண்டையும் ஒன்றாக சேர்த்து உப்பு சேர்த்து கைவைத்து கரைத்து வைக்கவும்.
நன்கு மாவு புளித்து வந்ததும் இட்லி ஊற்ற மாவு தயார். பிறகு இட்லி தட்டில் இட்லி மாவை ஊற்றுவதற்கும் முன் துணியை ஈரம் செய்து விட்டு இட்லி மாவு ஊற்றினால் பஞ்சு மாதிரி ஒட்டாமல் இட்லி வரும்.