பஞ்சு மாதிரி இட்லி... அதுவும் ரேஷன் அரிசியில்; இத ஃபாலோ செஞ்சா ரொம்ப ஈஸி!

இட்லி பஞ்சு மாதிரி வருவதற்கு எப்படி மாவு ஆட்டுவது என்று பார்ப்போம். இதற்கு அரிசி மற்றும் உளுந்து அளவு மிக முக்கியமானது.

இட்லி பஞ்சு மாதிரி வருவதற்கு எப்படி மாவு ஆட்டுவது என்று பார்ப்போம். இதற்கு அரிசி மற்றும் உளுந்து அளவு மிக முக்கியமானது.

author-image
WebDesk
New Update
இட்லி மாவு அரைக்கும் முறை

மிகவும் சாப்டாக இட்லி வேண்டுமா? அதற்கு எப்படி மாவு அரைக்க வேண்டும் என்று கைமனம் மீனாட்சி யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம். மாவு அரைக்க தெரியாதவர்கள் கூட ஈஸியாக மாவு அரைத்து விடலாம். இட்லியும் சாஃப்டாக வரும். 

Advertisment

தேவையான பொருட்கள்

அரிசி - 6 கப்
உப்பு
ஐஸ் தண்ணீர்

செய்முறை

Advertisment
Advertisements

முதலில் உளுந்தையும் அரிசியையும் நன்கு கழுவி தனித்தனியாக ஊறவைத்து, பிரிட்ஜில் வைக்கவும். அரைப்பதற்கு முன் குளிர்ச்சியாக வைத்திருப்பது இட்லியின் மென்மையை அதிகரிக்கும். 

முதலில், ஒரு கப் உளுந்தையும் ஆறு கப் அரிசியையும் தனித்தனியாக எடுத்து, தண்ணீர் ஊற்றி நன்றாகக் கழுவவும். பின்னர், போதுமான தண்ணீர் ஊற்றி இரண்டு பொருட்களையும் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். ஊறவைத்த பிறகு, இந்த பாத்திரங்களை மூடி பிரிட்ஜில் வைக்கவும். குளிர்ச்சியான சூழலில் ஊறவைப்பது மாவு புளிக்கும் செயல்முறையை மெதுவாக்கும் என்றும், இட்லி மிருதுவாக வரும் என்றும் நம்பப்படுகிறது.

அரைக்கும் நேரத்தில், முதலில் உளுந்தை எடுக்கவும். மிக்ஸி அல்லது கிரைண்டரில் போடும்போது, ஐஸ் தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி மிருதுவாக அரைக்கவும். ஐஸ் தண்ணீர் சேர்ப்பது மாவு சூடாகாமல் இருக்க உதவும், இது இட்லியின் மென்மைக்கு முக்கியம். உளுந்து மாவு நன்கு பொங்கி வரும் வரை அரைக்க வேண்டும்.

Idli Recipe

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: