கடையில் வாங்கிய இட்லி மாவு... இந்த எண்ணெய் ஒரு ஸ்பூன் மட்டும் சேருங்க; கல்லு மாதிரி வாராது; ஒருமுறை ட்ரை பண்ணுங்க!

கடையில் வாங்கிய இட்லி மாவில் கூட சாஃப்டான இட்லி வர வேண்டும் என நினைப்பவர்கள் மாவில் சேர்க்க வேண்டிய முக்கியமான ஒன்றை பற்றி பார்ப்போம்.

கடையில் வாங்கிய இட்லி மாவில் கூட சாஃப்டான இட்லி வர வேண்டும் என நினைப்பவர்கள் மாவில் சேர்க்க வேண்டிய முக்கியமான ஒன்றை பற்றி பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
இட்லி மாவு அரைக்கும் முறை

தென்னிந்தியாவின் விருப்பமான காலை உணவு சிற்றுண்டியான இட்லி, மென்மையாகவும் பஞ்சு போன்றும் இருந்தால் அதன் சுவையே தனிதான். ஆனால், சில சமயங்களில் இட்லி கடினமாக வந்துவிடுகிறது. ஷாந்தி லைஃப்ஸ்டைல் யூடியூப் பக்கத்தில் மென்மையான இட்லிகளை செய்ய கூறப்பட்ட இரண்டு குறிப்புகளை பற்றி பார்ப்போம். 

Advertisment

முதலாவதாக, இட்லி மாவில் உப்பு சேர்க்கும் போது, அதனுடன் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். தேங்காய் எண்ணெய் மாவுடன் சேரும்போது, இட்லி வெந்த பிறகு மிருதுவாகவும், ஈரப்பதத்துடனும் இருக்க உதவுகிறது. இது இட்லியின் அமைப்பை மேம்படுத்தி, கடினமாவதைத் தடுக்கிறது.

இரண்டாவதாக, இட்லி பாத்திரத்தில் தண்ணீர் நன்றாகக் கொதித்த பின்னரே இட்லி மாவை இட்லி தட்டுகளில் ஊற்ற வேண்டும். தண்ணீர் கொதிப்பதற்கு முன்பு மாவை ஊற்றுவதால், நீராவி சரியாக உருவாகாமல் இட்லி கெட்டியாக வாய்ப்புள்ளது. கொதிக்கும் தண்ணீரில் இருந்து வரும் நீராவியானது மாவை உடனடியாக வேகவைக்கத் தொடங்குகிறது, இதன் மூலம் இட்லி மென்மையாக வெந்து பஞ்சு போன்ற அமைப்பைப் பெறுகிறது.

இந்த இரண்டு எளிய வழிமுறைகளையும் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் வீட்டில் செய்யும் இட்லிகள் எப்போதும் மென்மையாகவும், சுவையாகவும் இருக்கும். கடினமான இட்லிகளைத் தவிர்த்து, உங்கள் காலை உணவை மேலும் மகிழ்ச்சிகரமாக்க இந்த குறிப்புகள் நிச்சயம் உதவும். ஷாந்தி லைஃப்ஸ்டைலின் இந்த டிப்ஸை பயன்படுத்தி, நீங்களும் பஞ்சு போன்ற இட்லிகளை செய்து அசத்துங்கள்.

Advertisment
Advertisements

Idli Recipe

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: