ரேஷன் அரிசி வைத்து பஞ்சு போல இட்லிக்கு மாவு அரைப்பது எப்படி என்று இந்தியன் ரெசிபீஸ் தமிழ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
இன்றைய காலத்தில் இட்லிக்கு மாவு அரைப்பது என்று மிகப்பெரிய வேலையாக இருக்கிறது. சமையலில் இட்லிக்கு மாவு அரைப்பது தான் மிகவும் சிக்கலாக உள்ளது. அதனாலேயே இப்போதெல்லாம் கடைகளில் மாவு வாங்கி பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் ரேஷன் அரிசியிலேயே ஈஸியாக இட்லி தோசைக்கு மாவு அரைக்கலாம்.
ரேஷன் புழுங்கல் அரிசி, பச்சரிசி எடுத்து நன்கு கழுவி கொள்ளவும். பின்னர் இவற்றை ஆறு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஒரு கப் உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் தண்ணீர் வடித்து உளுந்தை மட்டும் முதலில் அரைத்து கொள்ளவும். இடையிடையே தண்ணீரை தெளித்து அரைத்துக் கொள்ளவும். பின்னர் இந்த உளுந்து மாவை தனியாக எடுத்துக் கொள்ளவும். கிரைண்டரில் சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு இரண்டு நிமிடம் ஓடவிட்டு பின்னர் ஊறவைத்த அரிசியை சேர்த்துக் கொள்ளவும்.
இந்த அரிசி மாவை தண்னீர் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும். இறுதியாக இந்த அரிசி மாவுடன் உளுந்த மாவையும் சேர்த்து ஒரு இரண்டு நிமிடம் ஓட விட்டு நன்கு கலந்ததும் எடுத்து புளிக்க வைக்கவும்.
பின்னர் இவற்றை எட்டு மணி நேரம் புளிக்க வைத்து எடுத்து மாவை கரைத்து இட்லி ஊற்ற ஆரம்பிக்கலாம். அவ்வளவு தான் இட்லி புசுபுசுன்னு வர ஆரம்பிக்கும்.