ரேஷன் அரிசி வைத்து இட்லி, தோசை மாவு ரெடி மிக்ஸ் செய்வது பற்றி பார்ப்போம். இதில் இட்லி, தோசை மட்டுமல்லாது ஆப்பம் உள்ளிட்டவையும் செய்து சாப்பிடலாம். ஆபீஸ் செல்பவர்கள், அடிக்கடி மாவு அரைக்க முடியாதவர்கள் இதை செய்து கொள்ளலாம். 6 மாதம் வரை கெடாமல் இருக்குமாம்.
Advertisment
தேவையான பொருட்கள்
ரேஷன் அரிசி பச்சை அரிசி உளுத்தம் பருப்பு வெந்தயம்
செய்முறை
Advertisment
Advertisements
முதலில் ரேஷன் அரிசி, பச்சை அரிசி தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். அதன் பின் அரிசியை கழிய வேண்டும். இப்போது உளுத்தம் பருப்பு எடுத்து அதில் வெந்தயம் சேர்த்து தண்ணீர் ஊற்றி கழுவி ஊற வைக்க வேண்டும்.
1 மணி நேரம் ஊற விடவும். அதன் பின், மாடியில் ஒரு துணி போட்டு அரிசி மற்றும் உளுந்தை காய வைக்க வேண்டும். ஈரம் இல்லாமல் நன்கு காய வைக்க வேண்டும். அப்போது தான் கெடாமல் இருக்கும். இப்போது அனைத்தையும் ஒரே பாத்திரத்தில் போட்டு கொள்ளலாம்.
இதன் பின், அரைப்பதற்கு முன் மாவு ஜவ்வரிசி அரை கப் சேர்க்க வேண்டும். இவை எல்லாவற்றையும் சேர்த்து நைசாக மிக்ஸி அல்லது மெசினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். இப்போது தோசை, இட்லி செய்யும் போது அதற்கு தேவையான அளவு மட்டும் மாவு எடுத்து உப்பு சேர்த்து கரைத்து வேண்டும். எப்போதும் பால் 6-8 மணி நேரம் புளிக்க விடவும். அதன் பின் எப்போதும் போல் தோசை, இட்லி செய்யலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news