/tamil-ie/media/media_files/uploads/2022/01/Idly-Sambar.jpg)
பொதுவாக சாம்பார் என்றாலே பருப்பு இல்லாமல் இருக்காது என்றுதான் நினைப்போம். ஆனால், பருப்பு சேர்க்காமலேயே சுவையான சாம்பார் செய்வது எப்படி என்று இந்தியன் ரெசிப்பீஸ் தமிழ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம். பருப்பு பிடிக்காதவர்கள் அல்லது பருப்பு இல்லாமல் சாம்பார் செய்ய விரும்புபவர்களுக்கு இந்த ரெசிபி மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்
சிறிய வெங்காயம்
தக்காளி
பச்சை மிளகாய்
பூண்டு
மிளகாய் தூள்
கொத்தமல்லி தூள்
உப்பு
மஞ்சள் தூள்
கடலை மாவு
எண்ணெய்
நெய்
கடுகு
உளுத்தம் பருப்பு
சீரகம்
வெந்தயம்
காய்ந்த மிளகாய்
கறிவேப்பிலை
வெல்லம்
கொத்தமல்லி
செய்முறை
முதலில், சிறிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், உப்பு மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒரு பிளெண்டரில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
பிறகு, 2 டேபிள்ஸ்பூன் கடலை மாவையும் இதனுடன் சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைத்துக்கொள்ளவும். இந்த அரைத்த கலவையை ஒரு குக்கரில் ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.
குக்கரை மூடி, அதிக தீயில் 2 விசில் வரும் வரை சமைக்கவும். பிறகு அடுப்பை அணைத்து
விட்டு, குக்கரில் உள்ள ஆவி அடங்கும் வரை தனியாக வைக்கவும். இப்போது தாளிப்பதற்கு, ஒரு கடாயில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் மற்றும் வெந்தயம் சேர்த்து தாளிக்கவும்.
தாளித்தவுடன், காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பிறகு, மஞ்சள் தூள் மற்றும் பூண்டு பற்களை தட்டிப் போட்டு வதக்கவும். குக்கரில் உள்ள சமைத்த கலவையை இந்த தாளிப்பில் ஊற்றி நன்கு கலக்கவும். தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
சாம்பார் கொதிக்க ஆரம்பித்ததும், ஒரு சிறிய துண்டு வெல்லம் சேர்க்கவும். வெல்லம் சேர்ப்பதால் சாம்பாரின் சுவை கூடும். இறுதியாக, நறுக்கிய கொத்தமல்லி இலைகளைத் தூவி இறக்கவும். சுவையான, பருப்பு இல்லாத சாம்பார் இப்போது தயாராகிவிடும். இதை இட்லி, தோசை அல்லது சாதத்துடன் சூடாக பரிமாறினால் மிகவும் ருசியாக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.