நார்சத்து நிறைந்த இந்த ஓட்ஸ் இட்லியை நீங்கள் கண்டிப்பாக சமைத்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்
ஓட்ஸ்- ஒரு கப்
உளுந்தம் பருப்பு- 1 கப்
இஞ்சி
பச்சை மிளகாய்
உப்பு
செய்முறை : உளுந்தை நன்றாக கழுவ வேண்டும். தொடர்ந்து அதை 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும், ஊறிய உளுந்தை இஞ்சி, மிளகாயுடன் அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். ஓட்ஸை அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும் . தொடர்ந்து அதை மாவுடன் கலந்து 7 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். இப்போது இட்லியாக போட்டு அவித்து எடுக்கலாம்.