கோவை ஸ்பெஷல் இளநீர் இட்லி அதனுடன் ஆந்திரா புளி சட்னி செய்வது பற்றி செஃப் தீனா தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Advertisment
தேவையானவை
இட்லி அரிசி - 1 கிலோ உளுத்தம் பருப்பு - 100 கிராம் தேங்காய் - 1 கொட்ட முத்து - 7 உப்பு - தேவையான அளவு
சட்னி செய்ய
Advertisment
Advertisement
எள் பச்சை மிளகாய் சின்ன வெங்காயம் புளி, பூண்டு வேர்க்கடலை தக்காளி
செய்முறை
முதலில் இட்லி அரிசி, உளுத்தம் பருப்பு தனித் தனியே ஊற வைக்க வேண்டும். அரிசி 2 மணி நேரமும், உளுத்தம் பருப்பு மணி நேரமும் ஊறவிட்டால் போதுமானது. இதன் பின் உளுத்தம் பருப்பை 4 முறை தண்ணீரில் கழுவி கிரைண்டரில் போட்டு அரைக்கவும். நன்கு அரைத்த பின் தனியாக எடுத்துக் கொள்ளவும். அதன் பின் இதே போல் அரிசியையும் கழுவி கிரைண்டரில் போட்டு அரைக்கவும். அப்போது கொட்ட முத்துவும் போட்டு அரைக்கவும். இதன் பின் 32 மணி நேரம் அரிசியை மட்டும் புளிக்க வைக்கவும்.
இதன் அந்த மாவு எடுத்து அப்போது அரைத்த உளுத்தம் பருப்பை சேர்த்து கலக்கவும். அடுத்து உப்பு போட்டு கலக்கி இளநீர் தண்ணீர் ஊற்றவும். இதன் பின் மீண்டும் 1 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். அதன் பின் தான் இட்லி ஊற்ற முடியும்.
இடையில், ஆந்திரா புளி சட்னி செய்ய, அடுப்பில் கடாய் வைத்து வெறும் எள் மட்டும் போட்டு வறுத்து, கடலை எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், புளி, பூண்டு, வேர்க்கடலை சேர்த்து தக்காளி நறுக்கி சேர்க்கவும். தேங்காயும் போட்டு வறுக்கவும். அவ்வளவு தான் இப்போது மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்தால் சட்னி ரெடி. எப்போது போல் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் சேர்க்கவும். அடுத்தாக இட்லி ஊற்றி, ஆந்திரா புளி சட்னி வைத்து சாப்பிட்டால் சுவை அள்ளும்.
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news