கடும் குளிர் மற்றும் மழை காலங்களில் சளி, இருமல் நம்மை தாக்காமல் இருக்க வேண்டும் என்றால் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த வேண்டும். இந்நிலையில் 3 வகையான பானங்களை நாம் தூங்கும் முன்பு குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்
மஞ்சள்தூள் பால்
ஒரு பாத்திரத்தில் பால் கொதிக்க வைத்து அதில், மஞ்சள்தூள், மிளகுத் தூள், ஏலக்காய், நெய் மற்றும் வெல்லம் ஆகியவற்றை கலந்து குடிக்கலாம்.
எலுமிச்சை புல் டீ
முதலில் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் துளசி சேர்க்கவும். நன்றாக கொதித்த பிறகு. அடுப்பை அணைத்துவிட்டு அதில் எலுமிச்சை புல்லை சேர்த்து 3 நிமிடங்கள் கழித்து குடிக்கவும்.
மசாலா பானம்
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதை அடுப்பில் வைக்க வேண்டும். தொடர்ந்து அதில் பட்டை, கிராம்பு, அண்ணாசிப் பூ, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து. அதன் சாறு இறங்கும் வரை காத்திருந்து குடியுங்கள்.