நோய் நொடி அண்டாது... மழை நேரத்துக்கு இத விட பெஸ்ட் இல்ல; சூடான சோறுக்கு சுவையான ரசம்!

என்றும் இளமை, நோய் நொடி இல்லாமல் வாழ இயற்கையான ஆரோக்கிய ரசம் எப்படி செய்வது என்று பார்ப்போம். இந்த காய் சாப்பிட பிடிக்காதவர்கள் கூட இப்படி ரசம் செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள்.

என்றும் இளமை, நோய் நொடி இல்லாமல் வாழ இயற்கையான ஆரோக்கிய ரசம் எப்படி செய்வது என்று பார்ப்போம். இந்த காய் சாப்பிட பிடிக்காதவர்கள் கூட இப்படி ரசம் செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள்.

author-image
Kalaiyarasi Sundharam
New Update
amla rasam

குளிர் காலத்திலும் மழை நேரத்திலும் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியம். எளிதில் சளி, இருமல் போன்ற நோய்கள் நம்மை அண்டாமல் இருக்க, நம் முன்னோர்கள் வழங்கிய பாரம்பரிய உணவுகளில் மிகச் சிறந்தது இந்த ஆரோக்கிய ரசம். மிளகு, சீரகம், பூண்டு போன்ற அத்தியாவசிய பொருட்களைப் பயன்படுத்தி செய்யப்படும் இந்த ரசம், நோய் எதிர்ப்பு சக்தியைப் பன்மடங்கு அதிகரித்து, உடலை சூடாக வைத்து, செரிமானத்திற்கும் உதவுகிறது. சூடான சாதத்துடன் இந்த சுவையான ரசத்தை ஊற்றி சாப்பிடும்போது, அந்த மழைக்கால உணர்வே அலாதிதான். இந்த அருமையான ரசத்தை எப்படி செய்வது என்று செல்விஸ்வே இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம். 

Advertisment

தேவையான பொருட்கள்:

மிளகு1 டீஸ்பூன்
சீரகம்1 டீஸ்பூன்
பூண்டுப் பற்கள்4 - 5 தோலுடன்
காய்ந்த மிளகாய் - 1
புளி 
தக்காளி - 
மஞ்சள் தூள் -¼ டீஸ்பூன்
உப்பு 
பெருங்காயத் தூள் 
நல்லெண்ணெய்/நெய் -1 டீஸ்பூன்
கடுகு -½ டீஸ்பூன் 
கறிவேப்பிலை 
கொத்தமல்லி இலை

செய்முறை:

முதலில், மிளகு, சீரகம், பூண்டு, மற்றும் காய்ந்த மிளகாயை ஒன்றாக சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் ஒன்றிரண்டாக அரைத்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் புளியை ஊறவைத்து, அதில் உள்ள சக்கையை நீக்கி புளிக்கரைசலை எடுக்கவும். இந்த கரைசலுடன் நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், தேவையான உப்பு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து, நன்கு கையால் பிசைந்து கரைக்கவும். 

ரசம் புளிப்பாக இருக்க விரும்பினால், கூடுதலாக ஒரு தக்காளி சேர்க்கலாம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து, எண்ணெய் அல்லது நெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து வெடிக்க விடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். தாளிப்புடன் நாம் அரைத்து வைத்திருக்கும் ரசப்பொடியைச் சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை சில நொடிகள் வதக்கவும். இத்துடன் நாம் தயாரித்து வைத்திருக்கும் புளி-தக்காளி கரைசலை ஊற்றி, தேவையான அளவு (சுமார் 2 கப்) தண்ணீர் சேர்க்கவும்.

Advertisment
Advertisements

ரசத்தை அதிக நேரம் கொதிக்க விடக்கூடாது. ரசம் நுரைத்து மேலே வரும்போது, கொத்தமல்லி இலைகளை தூவி உடனடியாக அடுப்பை அணைக்கவும். இந்த ஆரோக்கிய ரசம் சுடச்சுட தயார். சூடான சாதத்துடன் இந்த ரசத்தை சேர்த்து சாப்பிட்டால், உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவதுடன், சுவையான உணவு உண்ட திருப்தியையும் பெறலாம்.

Rasam Amla

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: