வீட்டில் இட்லி மாவு மற்றும் தோசை மாவு இல்லை என்றால், உடனடியாக என்ன செய்வது என்று நாம் குழும்பிவிடுவோம். கோதுமை தோசை, ஓட்டஸ் தோசை என்று இன்ஸ்டண்டாக பல உணவுகள் இருகின்றன.
ஆனால் உடனடியாக இட்லியை அதுவும் அரிசி மாவு இல்லாமல் செய்ய முடியுமா ? ஆம் அது சாத்தியம்தான். கோதுமை மாவு இருந்தாலே போதும். பெரிய மெனக்கெடல் இல்லாமல் இடலி செய்துவிடலாம். 30 நிமிடங்களில் இருந்து 1 மணி நேரம் ஆக்கும் அவ்வளவுதான்.
வீட்டில் இருக்கும் கோதுமை மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, அடுப்பில் வறுக்கவும். 2 நிமிடங்களுக்கு ஒரு முறை கிளரிவிடவும். கிளராவிட்டால் கருந்துவிடும். கையில் உருட்டினால் சுடும் அளவிற்கு கோதுமை மாவை வறுக்க வேண்டும்.
ஒரு கப் கோதுமை மாவுக்கு ஒரு கப் தயிர் சேர்த்து கலந்துவிடவும். இதைத்தொடர்ந்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து, மாவு பதத்திற்கு கொண்டு வந்தபின், அதில் பின்வருபவைகளை தாலித்து கொட்ட வேண்டும். எண்ணெய் சூடானும் அதில் கடுகு, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, பச்சை மிளகாய் நறுக்கியதை ஆகியவற்றை தாலிக்க வேண்டும். மாவுடன் தாளிப்பதை கொட்டிவிட்டு, சோடா உப்பு சேர்த்து கிளரவும். 30 நிமிடங்கள் வரை மாவை ஊறவைத்த பிறகு இட்லி தட்டில் ஊற்றி அவித்து எடுக்கவும்.