/indian-express-tamil/media/media_files/2025/11/01/download-61-2025-11-01-14-48-44.jpg)
சாதம் மீதமாகிவிட்டால் அதனை உடனே குப்பையில் தொங்க விட்டுவிடும் பழக்கம் பலரிடம் உள்ளது. ஆனால் மீந்த சாதத்தை மறுபயன்படுத்தி, ஆரோக்கியமான மற்றும் சுவையான காலை உணவாக மாற்றுவது எளிதாக செய்யக்கூடிய ஒரு செய்முறை. குறிப்பாக, அதற்கு தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிட்டால் சுவை வேறேலெவலில் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
- சாதம் - 1 கப்
- கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
- பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
- இஞ்சி - 3/4 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
- பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
- முந்திரி - 10-15
- துருவிய தேங்காய் - 1 கப்
- சீரகம் - 1/2 டீஸ்பூன்
- பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
- கொத்தமல்லி - சிறிது
- கறிவேப்பிலை - சிறிது
- உப்பு - சுவைக்கேற்ப
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் மிக்ஸி ஜாரில் சாதத்தை மிக மென்மையாக அல்லாமல் கொரகொரப்பாக அரைத்து, ஒரு பாத்திரத்தில் எடுக்க வேண்டும். அதன் பிறகு, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், முந்திரி, துருவிய தேங்காய், கடலை மாவு ஆகியவற்றை கலக்கவும்.
இதனுடன் சீரகம், பெருங்காயத் தூள், மஞ்சள் தூள், கொத்தமல்லி, கறிவேப்பிலை மற்றும் உப்பையும் சேர்த்து, அனைத்தையும் நன்கு ஒன்றாக பிசைந்து கொள்ளவும்.
பிறகு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றவும். பிசைந்த கலவையை சிறிது எடுத்து உருட்டி, வாழை இலை மீது எண்ணெய் தடவி, உருட்டிய உருண்டையை கையால் தட்டிக் தோசை போன்ற வடிவில் செய்யவும். அதனை தோசைக் கல்லில் பொன்னிறமாக வதக்கி எடுத்தால், சுவையான அடை தயார்.
இந்த எளிய மற்றும் விரைவான செய்முறையால் மீந்த சாதத்தை வீணாகாமல், ஆரோக்கியமான காலை உணவாக மாற்ற முடியும். குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கே இது மிகவும் பிடிக்கும் வகை உணவு.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us