/indian-express-tamil/media/media_files/2024/12/13/qnmsNCDKm6oodfvZpAH8.jpg)
நிலக்கடலை நம் அன்றாட உணவில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ள இந்த எளிய தானியம், அதன் சுவை மற்றும் சத்துக்களுக்காகக் கொண்டாடப்படுகிறது. பர்பி உருண்டை முதல், இட்லி-தோசைக்கான சட்னி வரை, இது குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பிடித்த 'வலுவான' ஸ்நாக்ஸ் உணவாகப் பயன்படுகிறது. ஆனால், "எந்த ஒரு பொருளும் அளவுக்கு மீறினால் நஞ்சுதானே?" என்ற தத்துவத்தின்படி, இந்தக் கடலையை நாம் எந்த அளவுக்கு உணவில் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம்.
நிலக்கடலையின் நன்மைகள்:
நிலக்கடலையில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை உடலுக்குப் பல வழிகளில் வலு சேர்க்கின்றன. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள், உடலின் தீமை செய்யும் கொழுப்பைக் குறைத்து, நன்மை செய்யும் கொழுப்பை அதிகரிக்க உதவுகின்றன. 100 கிராம் நிலக்கடலையில் சுமார் 24 கிராம் மோனோ அன்சாச்சுரேட்டேட் மற்றும் 16 கிராம் பாலி அன்சாச்சுரேட்டேட் கொழுப்பு உள்ளது. இந்தக் கொழுப்புகள் நன்மை பயக்கும் வகையைச் சேர்ந்தவை.
பாதாமை விடவும் நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பின் அளவு அதிகமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதில் உள்ள ஒமேகா-3 சத்தானது, நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. சரியான அளவில் நிலக்கடலையை உட்கொள்வது இதயத்தைப் பாதுகாக்கும் நல்ல கொழுப்பை வழங்குவதன் மூலம் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது.
அளவுக்கு மீறினால் உண்டாகும் விளைவுகள்: அற்புதமான நன்மைகளைத் தரும் நிலக்கடலையை நாம் அதிக அளவில் அல்லது தவறான வழியில் எடுத்துக்கொள்ளும்போது சில பின்விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலர் நிலக்கடலை சாப்பிட்டால் எளிதில் செரிமானம் ஆவதில்லை என்று சொல்வதுண்டு. காரணம், இதில் லெக்டின் எனும் சத்து அதிகமாக உள்ளது. இந்த லெக்டின் செரிமானத்தை தாமதப்படுத்துவதுடன், மற்ற உணவுகளும் செரிக்க முடியாமல் அடைத்துக் கொள்ளும் நிலையை உண்டாக்கலாம்.
லெக்டின் சத்தின் காரணமாக செரிமானப் பிரச்சனை நீடித்தால், அது நாளடைவில் எலும்புகளில் வீக்கம் அல்லது தேய்மானம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. பொதுவாக, நிலக்கடலையில் சோடியம் (உப்பு) குறைவாகத்தான் உள்ளது. ஆனால், மதிப்புக் கூட்டப்பட்ட உப்புக்கடலை அல்லது எண்ணெயில் வறுத்த கடலை போன்றவற்றை நாம் தொடர்ந்து சாப்பிடும்போது, சேர்க்கப்படும் உப்பின் அளவு கூடுகிறது. ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் சோடியம் கூடினால் அது இரத்த அழுத்தத்தை அதிகரித்து, மாரடைப்பு மற்றும் வாதம் போன்ற அபாயங்களை உருவாக்கக்கூடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.