சுகர் ஏறாது; கேன்சரில் இருந்து பாதுகாக்கும்... இந்த அரிசியில் இப்படி கஞ்சி செய்து சாப்பிடுங்க: டாக்டர் கார்த்திகேயன்
சிவப்பு அரிசி சாப்பிடுவதால் உண்டாகும் பயன்கள் பற்றி டாக்டர் கார்த்திக்கேயன் தனது யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார். இதில் இருக்கும் வேதிப்பொருட்கள் பசி அதிகம் ஏற்படுவதை கட்டுப்படுத்துவதால் உடல் எடை சீக்கிரம் குறைய வாய்ப்பு அதிகம் உள்ளது.
சிவப்பு அரிசி சாப்பிடுவதால் உண்டாகும் பயன்கள் பற்றி டாக்டர் கார்த்திக்கேயன் தனது யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார். இதில் இருக்கும் வேதிப்பொருட்கள் பசி அதிகம் ஏற்படுவதை கட்டுப்படுத்துவதால் உடல் எடை சீக்கிரம் குறைய வாய்ப்பு அதிகம் உள்ளது.
அரிசியில் பல வகைகள் உள்ளன. அதில் ஒவ்வொன்றும் உடலுக்கு பல நன்மைகளை தருபவையாக இருக்கிறது. அந்த அரிசி வகைகளில் ஒன்றான சிவப்பு அரிசி சாப்பிடுவதால் உண்டாகும் பயன்கள் பற்றி டாக்டர் கார்த்திக்கேயன் தனது யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார்.
Advertisment
நார்ச்சத்து அதிகம் உள்ள சிவப்பு அரிசி உணவுகளை அவ்வப்போது சாப்பிட்டு வருவது செரிமான உறுப்புகளின் நலத்தை மேம்படுத்தும். குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கவும், நல்ல உடல் மற்றும் மன வளர்ச்சி பெறவும் அவர்கள் சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவு உண்ண வேண்டும். அதற்கு முதலில் ஆரோக்கியமான உணவுகளைேர்வு செய்ய வேண்டும்.
அப்படியாக அதிக நன்மைகள் கொண்ட சிவப்பு அரிசி கொண்டு செய்யப்பட்ட சிவப்பரிசி கஞ்சி, சிவப்பரிசி இட்லி, புட்டு, இடியாப்பம் போன்றவற்றை குழந்தைகளுக்கு அடிக்கடி உண்ண கொடுப்பதால் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அவர்களின் உடல் பலம் பெறும் என்று மருத்துவர் கார்த்த்கேயன் கூறுகிறார்.
உடல் எடையை விரைவில் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் காலை உணவாக சிவப்பு அரிசி புட்டு, இடியப்பம் உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். இதில் இருக்கும் வேதிப்பொருட்கள் பசி அதிகம் ஏற்படுவதை கட்டுப்படுத்துவதால் உடல் எடை சீக்கிரம் குறைய வாய்ப்பு அதிகம் உள்ளது.
Advertisment
Advertisements
நீரிழிவு நோய் உள்ளவர்கள் வெள்ளை அரிசி போன்றவற்றை அதிகம் சாப்பிடாமல் அந்த அரிசிக்கு மாற்றாக நீரிழிவு நோயை நன்கு கட்டுப்படுத்தும் ஆற்றல் வாய்ந்த சிவப்பு அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை காலை மற்றும் மதிய வேளைகளில் சாப்பிட்டு வரலாம்.
அதுமட்டுமின்றி புற்றுநோய் வராமல் தடுக்கும் சக்தியும் இந்த அரிசிக்கு உள்ளது. சிவப்பு அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை தினந்தோறும் ஒரு முறையேனும் உட்கொள்பவர்களுக்கு குடல் புற்று ஏற்படுவது தடுக்கப்படுவதாகவும் மருத்துவர் கார்த்திகேயன் கூறுகிறார்.அதுமட்டுமின்றி பிபியை கட்டுப்படுத்தும். உடல் சுறுசுறுப்பாக இருக்க உதவும்.