கம்பு, கொள்ளு கலந்து ஒரு ரெசிபி.. இந்த நன்மை இருக்கு.. சுகர் பேஷன்ட்ஸ் ப்ளீஸ் நோட்!

சத்து நிறைந்த கம்பு-கொள்ளு தோசை எப்படி செய்வது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

சத்து நிறைந்த கம்பு-கொள்ளு தோசை எப்படி செய்வது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பாரம்பரிய பெசரட் தோசை: இது கண்டிப்பா சிறந்த காலை உணவாக இருக்கும்

ஆரோக்கியமான உணவுகள் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. பல வகை சத்து நிறைந்த உணவுகள் சாப்பிட வேண்டும். இந்த நவீன காலத்தில் சிறுதானிய உணவுகள் சாப்பிடுவதை மறந்து வருகிறோம். தினமும் ஏதாவது ஒரு சிறுதானிய வகைகள் சோளம், கம்பு, தினை, கொள்ளு போன்றவை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

Advertisment

புரதம், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் கொண்டுள்ளன. இன்றளவும் பல நோய்களுக்கு மருந்தாகவும் இது இருந்து வருகிறது. பலரும் சர்க்கரை நோய்க்கு மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்து எடுத்து வருகின்றன.

உணவு முறையில் மாற்றம் செய்திருப்பர். அந்தவகையில் தங்களது உணவில் கம்பு, கொள்ளு சேர்த்துக் கொள்வது கூடுதல் நன்மை தரும். ரத்த சர்க்கரை அளவிவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர். கம்பு-கொள்ளு தோசை செய்து பாருங்க. கம்பு சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும். கொள்ளு உடலில் உள்ள கொழுப்பை கரைக்க உதவும்.

தேவையான பொருட்கள்

Advertisment
Advertisements

கம்பு - 1 கப்
கொள்ளு - 1/4 கப் 
அரிசி - 1 கப் 
வர மிளகாய் - 5
வெந்தயம் - 1 ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை

முதலில் அரிசியை தண்ணீர் சேர்த்து கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் அரிசியில் மீண்டும் தண்ணீர் ஊற்றி வெந்தயம் சேர்த்து 4 மணி நேரம் வரை ஊற வைக்கவும். அதே போன்று கம்பு மற்றும் கொள்ளு இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் சேர்த்து கழுவி சுமார் 8 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்.

இப்போது, அரிசி, வெந்தயம் ஊறிய பிறகு தண்ணீரை வடிகட்டி அதனை அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின் ஊற வைத்த கம்பு,
கொள்ளு எடுத்து வர மிளகாய் சேர்த்து அரைக்கவும். இதனை முன்பு அரைத்து வைத்துள்ள அரிசி மாவுடன் சேர்த்து நன்றாக கலக்கவும். மாவிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும். இப்போது மாவு ரெடி. மாவினை 7 மணி நேரம் வரை வைத்து புளிக்க வைக்க வேண்டும்.

மாவு புளித்த பிறகு மீண்டும் ஒரு முறை மெதுவாக கலக்கி விடவும். அடுத்ததாக, அடுப்பில் தோசைக் கல் வைத்து சூடானதும், கம்பு-கொள்ளு மாவை வட்டமாக ஊற்றவும். தோசை மீது எண்ணெய்யை சுற்றி ஊற்றவும். தோசையை திருப்பி போட்டு வேகவைத்து எடுத்தால் சத்தான கம்பு-கொள்ளு தோசை ரெடி.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Food Recipes Diabetes

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: