கம்பு இட்லியை இப்படி செய்துபாருங்க. சுவையும், ஆரோக்கியமும் உங்களுக்கு கிடைக்கும்.
தேவையான பொருட்கள்
கம்பு – 1 கப்
புழுங்கலரிசி – ½ கப்
உளுந்தம் பருப்பு- ½ கப்
உப்பு
செய்முறை : கம்பையும் அரிசியையும் தனியாக 4 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு கம்பை நன்றாக அரைத்தெடுக்கவும். உளுத்தம்பருப்பை தண்ணீர் தெளித்து, அதிக மாவு கிடைக்கும் வரை அரைத்தெடுங்கள். தொடர்ந்து அரிசியையும் தண்ணீர் விட்டு அரையுங்கள். இந்த மூன்று மாவையும் கலந்து 5 முதல் 6 மணி நேரம் புளிக்க வையுங்கள். அடுத்த நாள் இட்லி சூப்பராக சுடலாம்.