பட்டுக்கு பேர் போன காஞ்சிபுரத்தில் மிகவும் ஃபேமசாக உள்ள மற்றொரு டிஷ் பற்றி செஃப் தீனா அவரது யூடியூப் பக்கத்தில் கூறியிருக்கிறார். காலை உணவுக்கு ரவையை வைத்து ரவை பொங்கல் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு பெருங்காயத்தூள் கருவேப்பிலை எண்ணெய் ரவை நெய் பாசிப்பருப்பு உப்பு மிளகு சீரகம் முந்திரி இஞ்சி
செய்முறை
Advertisment
Advertisements
ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் ரவையைக் கொட்டி வறுக்க வேண்டும். மிதமான சூட்டில் வைத்து ரவை சிவந்து வரும் வரை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். பின்னர் பருப்பையும் நன்கு வேகவைக்கவும். பின்னர் இதிலேயே அந்த ரவையை சேர்த்து சிறிது உப்பு போட்டு கட்டி விழாமல் கிளற வேண்டும்.
கட்டி இல்லாமல் அனைத்தும் நன்றாக சேர்ந்து தண்ணீர் வற்றி கெட்டியானதும் பின்னர் இதனை ஒரு பத்து நிமிடம் மூடி வைக்கவும். இதனை தாளிக்க ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம், மிளகு சேர்த்து பொறிக்க விடவும். அடுத்ததாக முந்திரி, இஞ்சி, கருவேப்பிலை ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து எண்ணெயில் தாளித்து அந்த பொங்கலில் கொட்டி கிளறவும்.
தாளிப்பு போட்ட உடனே கிளறி பரிமாறலாம். சுவையாக இருக்கும் மேலே வாசனைக்கும் சுவைக்கும் உங்களுக்கு தேவையான அளவு நெய் சேர்த்து கிளறி கொள்ளலாம்.