உயர் இரத்த சர்க்கரை அளவைத் தவிர நீரிழிவு நோயுடன் தொடர்புடைய பல பிரச்சனைகளுக்கு கற்பூரவல்லி இலையைக் கொண்டு குணப்படுத்தலாம். கற்பூரவல்லி இலைகள் அஜீரணம், பெருங்குடல் ஆஸ்துமா மற்றும் வாயு போன்ற வயிற்று பிரச்சனைகளுக்கு உதவும். இப்படியாக நிறைய நன்மைகள் கொண்ட கற்பூரவல்லி இலையில் துவையல் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
கற்பூரவல்லி இலைகள் சிறிய வெங்காயம் பச்சை மிளகாய் துருவிய தேங்காய் பூண்டு பெருங்காயத்தூள் கல் உப்பு உளுந்து பருப்பு
செய்முறை:
Advertisment
Advertisements
முதலில், ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, உளுந்து, நறுக்கிய வெங்காயம், பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர் கற்பூரவல்லி இலைகள், பெருங்காயத்தூள் மற்றும் கல் உப்பு சேர்க்கவும். உளுந்து நன்றாக வறுபடும் வரை சமைக்கவும்.
ஆறியதும், வறுத்த கலவையை மிக்ஸியில் போட்டு, புளி மற்றும் தேங்காய் சேர்த்து அரைக்கவும். கற்பூரவல்லி துவையல் ரெடி. இது சுவையாகவும், ஆரோக்கியம் நிறைந்ததாகவும் இருக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
கற்பூரவல்லியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடவும் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும். தண்ணீரில் கொதிக்கும் கற்பூரவல்லி இலைகளின் நீராவியை உள்ளிழுப்பதால், நெஞ்சு நெரிசல் நீங்கும், அல்லது, நெரிசலில் இருந்து நிவாரணம் பெற அதன் சாற்றை மார்பில் தடவலாம்.கற்பூரவல்லி இலையை நீங்கள் எளிதாக மென்று சாப்பிடலாம். இது தொண்டை புண்களை ஆற்றவும், தேனுடன் கலந்து குளிர்ச்சியை குணப்படுத்தவும் பயன்படுத்தலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.