கத்திரிக்காய், முருங்கைக்காய், வாழைக்காய் சேர்த்து சுவையான புளி கூட்டு செய்வது பற்றி செஃப் தீனா பகிர்ந்துள்ளார். இது மதுரையில் பேமஸ் உணவாகும். இட்லி, தோசை, சப்பாத்தி, பிரியாணிக்கு கூட வைத்து சாப்பிடலாமாம்.
Advertisment
தேவையானவை
நல்லெண்ணெய் - 250 மி.லி கடுகு விதை - 3 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் - 200 மி.லி பெரிய வெங்காயம் - 1 கிலோ கறிவேப்பிலை - தேவையான அளவு காய்ந்த மிளகாய் - 3 எண் தக்காளி - 1 கிலோ கத்தரி - 1&1/2 கிலோ வாழைக்காய் - 5 எண் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் கொத்தமல்லி தூள் - 2 டீஸ்பூன் குழம்பு பொடி - 1 டீஸ்பூன் சாம்பார் பொடி - 1 டீஸ்பூன் பெருங்காயத் தூள் - 1 டீஸ்பூன் புளி - 100 கிராம்
செய்முறை
Advertisment
Advertisement
அடுப்பில் கடாய் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், வெங்காயம் போட்டு தாளிக்கவும். அதன் பின் கறிவேப்பிலை, வர மிளகாய், முருங்கை சேர்த்து வதக்கவும். 10 நிமிடம் வதக்கவும். அதன் பின் வாழைக்காய், கத்தரிக்காய் போட்டு வதக்கவும். மூடி வைத்து வதக்கவும். 5 நிமிடத்திற்கு பின் தண்ணீர் ஊற்றவும்.
இப்போது தக்காளி, புளி கரைசல் ஊற்றி 2 நிமிடங்கள் வதக்கவும். உப்பு சேர்க்கவும். 2 நிமிடத்திற்கு வதங்கிய பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், குழம்பு பொடி, சாம்பார் பொடி என அனைத்து மசாலாவைவும் சேர்த்து விடவும்.
தேவைப்பட்டால் புளி கரைசல் சேர்க்கவும். அதன் பின் பெருங்காயத் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். குறைந்த தீயில் வைத்து வேக விட்டு எடுத்தால் மதுரை பேமஸ் கத்திரிக்காய் புளி கூட்டு ரெடி.
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news