வெளியே மொறு மொறு; உள்ளே செம்ம சாஃப்ட்... இந்த கிழங்கில் சூடான வடை!

கேரளா ஸ்டைலில் சுவையான மற்றும் மொறு மொறுன்னு மரவள்ளிக்கிழங்கு வடை எப்படி செய்வது என்று பார்ப்போம். ஈவ்னிங் ஸ்நாக்ஸ்க்கு இது சுவையானதாக இருக்கும்.

கேரளா ஸ்டைலில் சுவையான மற்றும் மொறு மொறுன்னு மரவள்ளிக்கிழங்கு வடை எப்படி செய்வது என்று பார்ப்போம். ஈவ்னிங் ஸ்நாக்ஸ்க்கு இது சுவையானதாக இருக்கும்.

author-image
WebDesk
New Update
maravalli kizhangu vadai

Advertisment

கேரளா ஸ்பெஷல் மாலை நேர சிற்றுண்டிதான் கப்ப வடை அல்லது மரவள்ளிக்கிழங்கு வடை. மொறுமொறுப்பான வெளிப்புறமும், மென்மையான உட்புறமும் கொண்ட இந்த வடை, மாலை நேர தேநீருக்கு ஒரு சரியான தேர்வாகும். அப்படிப்பட்ட சுவையான மரவள்ளிக்கிழங்கு வடை எப்படி செய்வது என்று சக்கரசாதமும் வடகறியும் இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

மரவள்ளிக்கிழங்கு

Advertisment
Advertisements

அரிசி மாவு

பட்டை

சோம்பு

கிராம்பு

பூண்டு

இஞ்சி

பச்சை மிளகாய்

காய்ந்த மிளகாய்

கருவேப்பிலை

கொத்தமல்லி

வெங்காயம்

உப்பு

செய்முறை:

கப்ப வடை செய்வதற்கு முதல் படி, மரவள்ளிக்கிழங்கை வேகவைப்பதுதான். கிழங்கை நன்கு சுத்தம் செய்து, தண்ணீருடன் குக்கரில் சேர்த்து, ஐந்து விசில் வரும் வரை வேகவைக்க வேண்டும். கிழங்கு வெந்ததும், அதில் உள்ள நீரை முழுமையாக வடித்துவிட்டு, அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து நன்கு மசித்துக்கொள்ள வேண்டும். இதுதான் வடையின் மென்மையான உட்புறத்திற்கான அடிப்படை ஆகும்.

அடுத்து, வடைக்குத் தேவையான மசாலா கலவையைத் தயாரிக்க வேண்டும். ஒரு மிக்ஸியில் பட்டை, சோம்பு, கிராம்பு, பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, மற்றும் கொத்தமல்லி சேர்த்து நைசாக அரைத்துக்கொள்ள வேண்டும். இந்த கலவைதான் வடைக்கு தனித்துவமான மணத்தையும், சுவையையும் கொடுக்கும்.

இப்போது, மசித்த மரவள்ளிக்கிழங்குடன் கால் கப் அரிசி மாவைச் சேர்க்க வேண்டும். அரிசி மாவு சேர்ப்பது வடைக்கு மொறுமொறுப்பைக் கொடுக்கும். பிறகு, அரைத்து வைத்த மசாலா கலவை, பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, அனைத்தையும் ஒன்றாக நன்றாக பிசைய வேண்டும். மாவு உதிரியாகவும், வடை தட்டுவதற்கு ஏற்ற பதத்திலும் இருக்க வேண்டும். மாவில் அதிக தண்ணீர் இருந்தால், வடை எண்ணெய் அதிகம் குடிக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

கடைசியாக, பிசைந்த மாவைச் சிறுசிறு உருண்டைகளாக எடுத்து, வடை வடிவில் தட்ட வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அது சூடானதும், தட்டி வைத்த வடைகளை ஒவ்வொன்றாகப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்க வேண்டும். சுவையான, மொறுமொறுப்பான கப்ப வடை இப்போது தயாராகிவிட்டது. இதை சூடாக பரிமாறினால், அதன் சுவை இன்னும் அருமையாக இருக்கும்.

Cooking Tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: