கேழ்வரகில் இப்படி ஆப்பம் செய்தால் : சுவை அட்டகாசமா இருக்கும்

ஒரு முறை கேழ்வரகு ஆப்பம் , இப்படி செய்து பாருங்க. 

ஒரு முறை கேழ்வரகு ஆப்பம் , இப்படி செய்து பாருங்க. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஆப்பம்

ஒரு முறை கேழ்வரகு ஆப்பம் , இப்படி செய்து பாருங்க. 

Advertisment

தேவையான பொருட்கள்

கேழ்வரகு - 2 கப்
சாதம் - 1/2 கப்
சோடா மாவு - 1/2 டீஸ்பூன்
துருவிய தேங்காய் - 1 1/2 கப்
நாட்டுச்சர்க்கரை - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை

Advertisment
Advertisements

முதலில் கேழ்வரகு மாவை சலித்து எடுக்கவும். பின் அதை கடாயில் கொட்டி அடுப்பில் வைத்து மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும். இப்போது மிக்ஸியில் சாதம், தேங்காய், நாட்டுச்சர்க்கரை சேர்த்து அரைக்கவும். பின்னர் அதனுடன் வறுத்த கேழ்வரகு மாவை போட்டு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

அடுத்ததாக, அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சோடா மாவு மற்றும் உப்பு சேர்த்து கரைக்கவும். 8 மணி நேரம் வரை புளிக்க விடவும். மறு நாள் நன்கு புளித்து மாவு தயார் நிலையில் இருக்கும். இப்போது அடுப்பில் ஆப்ப கடாய் வைத்து கடாய் சூடானதும், எண்ணெய் தடவி மாவை ஊற்றி சுட்டு எடுக்கவும். அவ்வளவுதான் கேழ்வரகு ஆப்பம் தயார். தேங்காய்பால், முட்டை குருமாவை சைட் டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: