கேழ்வரகு மாவு மற்றும் வேர்கடலை இருந்தால் போதும். இந்த காலை உணவை சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
கேழ்வரகு மாவு – 2 கப்
வேர்கடலை – அரை கப்
வெல்லம் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை : கேழ்வரகு மாவை நன்றாக உப்பு சேர்த்து வறுக்க வேண்டும்.தொடர்ந்து அதை ரொட்டிகளாக சிறிய அளவில் எண்ணெய் விட்டு தட்டி, அடுப்பில் வைத்து சுட வேண்டும். தொடர்ந்து அதை தனியாக எடுத்து வைத்துகொள்ளுங்கள். கடலையை வறுக்க வேண்டும். தொடர்ந்து வெல்லத்தை இடித்து கொள்ளுங்கள். தொடர்ந்து கேழ்வரகு ரொட்டிகளை உடைக்க வேண்டும். அதில் வேர்கடலையை சேர்த்து இடித்து கலந்துகொள்ளுங்கள். மேலும் வெல்லத்தை சேர்த்துகொள்ளுங்கள். இப்போது எல்லாவற்றையும் ஒன்றாக கலக்க வேண்டும். தொடர்ந்து அதை உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.