கேழ்வரகு இட்லி, நிச்சயமாக ஒரு ஆரோக்கியமான உணவு. குறிப்பாக சுகர் நோயாளிகள் கொஞ்சம் அதிகமாக சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
கேழ்வரகு
இட்லி அரிசி
உளுந்து
கேரட்
வெந்தயம்
சோடா உப்பு
கொத்தமல்லி
உப்பு
செய்முறை: கேழ்வரகு, இட்லி அரிசி, உளுந்து ஆகியவற்றை நன்றாக ஊற வைக்க வேண்டும். சுமார் 5 மணி நேரம் ஊறிய பிறகு, இதை நன்றாக மாவு பதத்திற்கு அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். மேலும் அரைக்கும்போது வெந்தயத்தையும் செர்த்து கொள்ளுங்கள். இந்த மாவு இரவு முழுவதும் புளிக்க வைக்க வேண்டும். தொடர்ந்து அடுத்த நாள் காலையில், உப்பு, கேரட் துருவியது, கொத்தமல்லி சேர்த்து கிளர வேண்டும். தொடர்ந்து இட்லி, அல்லது தோசை செய்யலாம்.