கிட்னி கல் தடம் தெரியாமல் போகும்... வாரத்தில் ஒருமுறை இந்த ஜூஸ்; அடிக்கடி இந்த கஷாயம்: டாக்டர் யோக வித்யா
கிட்னி கல்லை குணப்படுத்த குடிக்க வேண்டிய ஜூஸ் பற்றி டாக்டர் யோக வித்யா கூறுகிறார். வாரம் இருமுறை குடித்தால் போதும் கிட்னி கால் குணமாகும் என்றும் கூறுகிறார்.
கிட்னி கல்லை குணப்படுத்த குடிக்க வேண்டிய ஜூஸ் பற்றி டாக்டர் யோக வித்யா கூறுகிறார். வாரம் இருமுறை குடித்தால் போதும் கிட்னி கால் குணமாகும் என்றும் கூறுகிறார்.
சிறுநீரகப் பிரச்சினைகள் நவீன காலத்தில் பலருக்கும் சவாலாக உள்ளன. சரியான உணவுப் பழக்கம், எளிமையான உடற்பயிற்சிகள் மற்றும் சித்த மருத்துவத்தின் உதவியுடன் சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முடியும் என்று டாக்டர் யோகவித்யா எத்னிக் ஹெல்த்கேர் யூடியூப் பக்கத்தில் கூறுகிறார்.
Advertisment
சிறுநீரகப் பிரச்சினைகளின் அறிகுறிகள்:
சிறுநீர் கழிப்பதில் குறைபாடு முகம் மற்றும் கண்கள் வீக்கம் வயிறு வீக்கம் உயர் இரத்த அழுத்தம்
சிறுநீரக கல் வராமல் தடுக்கும் முறைகள்:
Advertisment
Advertisements
நன்றாக மென்று உண்ணுங்கள்: உணவை அவசரம் இல்லாமல் நன்றாக மென்று சாப்பிடுவது செரிமானத்திற்கு உதவுவதுடன், சிறுநீரகங்களுக்கும் நன்மை பயக்கும்.
போதுமான தண்ணீர் அருந்துங்கள்: உடலை நீரேற்றமாக வைத்திருப்பது சிறுநீரகங்கள் கழிவுப் பொருட்களை வெளியேற்ற உதவும்.
சிறுநீரக கல் தடுப்பு: கோடை காலத்தில், அதிக புரத உணவுகள் (வே புரதம், அசைவ உணவு) மற்றும் பால் பொருட்கள் உட்கொள்பவர்களுக்கு சிறுநீரகக் கற்கள் உருவாகும் வாய்ப்பு அதிகம். எனவே அதனை தவிர்ப்பது நல்லது.
பூசணி, பீர்க்கங்காய், வெள்ளரிக்காய், வாழைத்தண்டு சாறு போன்ற காய்கறிகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம். வாரத்திற்கு ஒரு முறை முள்ளங்கி அல்லது வெள்ளை பூசணி சாறு குடிப்பது உடலைக் குளிர்ச்சியாக்கி சிறுநீரகங்களைச் சுத்தப்படுத்த உதவும்.
சுவாசப் பயிற்சி: சிறுநீர் கழிப்பதில் சிரமம் உள்ளவர்கள் இடது நாசி வழியாக சுவாசிக்கும் முறையைப் பின்பற்றலாம். இது உடல் சமநிலையை மேம்படுத்தி சிறுநீர் ஓட்டத்தைச் சீராக்கும்.
நீர் முள்ளி கஷாயம்: சிறுநீரக ஆரோக்கியத்திற்கு நீர் முள்ளி ஒரு முக்கியமான மூலிகை ஆகும். சித்த மருத்துவக் கடைகளில் கிடைக்கும் நீர் முள்ளி சூரணத்தை வாங்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிப்பது சிறுநீரகக் கற்கள் மற்றும் கட்டிகளைக் கரைக்க உதவும் என்று டாக்டர் கூறுகிறார்.
நீர் முள்ளி கஷாயம் செய்முறை: ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீருடன் ஒரு தேக்கரண்டி சூரணம் அல்லது சிறிய அளவு மூலிகையை சேர்த்து, தண்ணீர் ஒரு கப் அளவுக்குக் குறையும் வரை கொதிக்க விடவும். பின்னர் வடிகட்டி, மிதமான சூட்டில் பருகவும். சுவைக்கு சிறிதளவு பனை வெல்லம் சேர்க்கலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.