சாஃப்ட் கொழுக்கட்டைக்கு இதுல கொஞ்சம்; எலுமிச்சை தோலில் டேஸ்டியான ஊறுகாய்... இன்றைய குக்கிங் டிப்ஸ்!

சமையலில் சுவையை கூட்ட உதவும் சில சமையல் குறிப்புகள் பற்றி பார்ப்போம். இதனை நியாபகம் வைத்துக்கொண்டாலே போதும் சமையல் சுவையாகவும் கெட்டுப்போகாமல் இருக்கவும் உதவும்.

சமையலில் சுவையை கூட்ட உதவும் சில சமையல் குறிப்புகள் பற்றி பார்ப்போம். இதனை நியாபகம் வைத்துக்கொண்டாலே போதும் சமையல் சுவையாகவும் கெட்டுப்போகாமல் இருக்கவும் உதவும்.

author-image
WebDesk
New Update
தக்காளி அழுகாமல் இருக்க.. எளிதாக முட்டை ஓடு அகற்ற.. இதோ பயனுள்ள கிச்சன் ஹேக்ஸ்!

சமையலை சிறப்பாக மாற்றவும் ஒரு சில சமையல் குறிப்புகளை தெரிந்து வைத்துக்கொள்ளலாம். ஊறுகாய் செய்வது முதல் உடையாமல் கொழுக்கட்டை செய்வது என சில சமையல் குறிப்புகள் பற்றி பார்ப்போம்.

Advertisment

பலகாரங்கள்: சீடை, தேன்குழல் போன்ற பலகாரங்கள் செய்ய மாவு பிசையும்போது, வெந்நீர் சேர்த்துப் பிசைந்தால், அவை நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.

போளி: கடலைப்பருப்புடன், வேகவைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து போளி செய்தால், அதன் சுவை தனித்துவமாக இருக்கும்.

சத்துக்கள் வீணாகாமல் இருக்க: கீரை, முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளில் உள்ள சத்துக்கள் வீணாகாமல் இருக்க, தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த பின்னரே அவற்றை வேகவைக்க வேண்டும்.

Advertisment
Advertisements

ருசியான உருளைக்கிழங்கு காரக்கறி: உருளைக்கிழங்கு காரக்கறி செய்யும்போது, அரைக்கரண்டி புளிப்பில்லாத கெட்டித்தயிர் சேர்த்து வதக்கினால், கறி மிகவும் ருசியாக இருக்கும்.

பால்: பாலுடன் சிறிது ஏலக்காய் கலந்து காய்ச்சினால், பால் நல்ல மணமாகவும், நீண்ட நேரம் புளிப்பு ஏறாமலும் இருக்கும்.

காய்கறிகள் கெடாமல் இருக்க: ஈரமான காய்கறிகளை ஒரு காகிதத்தில் சுற்றி குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால், அவை சீக்கிரமாக அழுகிப்போகாது.

மொறுமொறு உளுந்து வடை: உளுந்து வடை தட்டும்போது, கைகளில் சிறிது அரிசி மாவை லேசாகத் தொட்டுத் தட்டினால், மொறுமொறுப்பான வடை கிடைக்கும்.

விரிசல் இல்லாத கொழுக்கட்டை: கொழுக்கட்டைக்கு மாவு கிளறும்போது, தண்ணீருடன் சிறிது பால் சேர்த்துப் பிசைந்தால், கொழுக்கட்டை விரிந்து போகாமல் வரும்.

ரசப்பொடியின் நறுமணம்: கொத்தமல்லித்தழையை ரசத்தில் பயன்படுத்திய பின், அதன் தண்டுகளை வீணாக்காமல் காயவைத்து, ரசப்பொடியுடன் சேர்த்து அரைத்தால், ரசம் நல்ல வாசனையாக இருக்கும்.

எலுமிச்சை ஊறுகாய்: வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு எலுமிச்சை ஜூஸ் தயார் செய்த பிறகு, எலுமிச்சை தோல்களை வீணாக்காமல், அவற்றைப் பயன்படுத்தி சுவையான எலுமிச்சை ஊறுகாய் செய்யலாம்.

பூசணம் வராத சாம்பார் பொடி: சாம்பார் பொடி அரைக்கும்போது, ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து அரைத்தால், சாம்பார் பொடியில் பூசணம் வராது.

Kitchen Hacks In Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: