ஒரு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாது; வெங்கடேஷ் பட் ஸ்டைலில் கொத்தமல்லி சட்னி ட்ரை பண்ணுங்க!

பிரபல சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட் தான் செய்கிறபடி கொத்தமல்லி சட்னி செய்தால் ஒரு மாதம் ஆனாலும் கெட்டுப்போகாது என்கிறார். வெங்கடேஷ் பட் ஸ்டைலில் கொத்தமல்லி சட்னி ட்ரை பண்ணுங்க.

பிரபல சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட் தான் செய்கிறபடி கொத்தமல்லி சட்னி செய்தால் ஒரு மாதம் ஆனாலும் கெட்டுப்போகாது என்கிறார். வெங்கடேஷ் பட் ஸ்டைலில் கொத்தமல்லி சட்னி ட்ரை பண்ணுங்க.

author-image
WebDesk
New Update
kothamalli chutney x

வெங்கடேஷ் பட் ஸ்டைலில் கொத்தமல்லி சட்னி ட்ரை பண்ணுங்க.

சாம்பார், குழம்பு, சைவம், அசைவம் எதுவாக இருந்தாலும் கொத்தமல்லி அதன் வாசனையால் சிறப்பாக்கிவிடும். அதிலும் கொத்தமல்லி சட்னி செய்தால் எப்படி இருக்கும் பாருங்கள். பிரபல சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட் தான் செய்கிறபடி கொத்தமல்லி சட்னி செய்தால் ஒரு மாதம் ஆனாலும் கெட்டுப்போகாது என்கிறார். வெங்கடேஷ் பட் ஸ்டைலில் கொத்தமல்லி சட்னி ட்ரை பண்ணுங்க.

Advertisment

கொத்தமல்லி சட்னி செய்வது எப்படி என்று இங்கே பார்க்கலாம். முதலில் நன்றாக பசுமையாக உள்ள கொத்தமல்லி 2 கட்டு எடுத்துக்கொள்ளுங்கள். ஆதாவது கொத்தமல்லி பெரிய கட்டு என்றால் 2 போதும், சின்ன சின்ன கட்டு என்றால் கொத்தமல்லி 5-6 கட்டு எடுத்துகொள்ளுங்கள். கொத்தமல்லியை வேர்பகுதியை நீக்கிவிட்டு, கொத்தமல்லியை நன்றாகக் கழுவி  அலசி வைத்துக்கொள்ளுங்கள். 

கழுவி வைத்த கொத்தமல்லியை கிரைண்டரில் போட்டு அரைத்துக்கொள்ளுங்கள். கொத்தமல்லியை மிக்ஸியில் அரைக்காதீர்கள். கிரைண்டரில் மட்டுமே அரைக்க வேண்டும். கொத்தமல்லியில் சுத்தமாக ஒரு சொட்டு தண்ணீர் இல்லாமல் அரைக்க வேண்டும். அப்போதுதான் அது ஒரு மாதம் ஆனாலும் கெடாமல் இருக்கும். 

கொத்தமல்லியை நன்றாக அரைத்த பிறகு, 250 கிராம் பச்சைமிளகாயை கீறி கொத்தமல்லியுடன் போட்டு அரையுங்கள். கொத்தமல்லி, பச்சைமிளகாய் அரைந்த உடன், அதனுடன் 200 கிராம் புளி போட்டு அரையுங்கள். நன்றாக அரைத்த பிறகு,  50 கிராம் கல் உப்பு போட்டு நன்றாக அரையுங்கள். ஒரு சொட்டுகூட தண்ணீர் சேர்க்கக்கூடாது. அப்போதுதான் 1 மாதம் ஆனாலும் கெட்டுப்போகாது. 

Advertisment
Advertisements

இப்போது, வானலியை எடுத்து ஸ்டவ்வில் வைத்து பற்ற வையுங்கள். தேங்காய் எண்ணெய் 2 டீஸ்பூன் ஊற்றுங்கள். தேங்காய் எண்ணெய் சூடானவுடன் 10 காய்ந்த மிளகாய் போடுங்கள். காய்ந்த மிளகாய் வறுந்ததும் 2 டீஸ்பூன் கடுகு போடுங்கள். கடுகு பொரியும்போது ஸ்டவ்வை ஆஃப் செய்துவிடுங்கள். கடுகு பொரிந்ததும், அதனுடன் ஒரு டீஸ்பூன் பெருங்காயம் போடுங்கள்.  அடுத்து, 2 கொத்து கரிவேப்பிலை போடுங்கள். பெருங்காயம் நன்றாக ரோஸ்ட் ஆனவுடன் அதை அப்படியே எடுத்து, நாம் ஏற்கெனவே அரைத்து வைத்துள்ள கொத்தமல்லியில் சேர்க்க வேண்டும். நன்றாக கலக்கி விடுங்கள். அவ்வளவுதான், சுவையான கொத்தமல்லி சட்னி தயார். இதை நீங்கள் ஃபிரிட்ஜில் எடுத்து வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமகா எடுத்து பயன்படுத்தலாம். இட்லி, தோசை, சோறு, பிரட் என எதற்கு வேண்டுமானாலும் எடுத்து பயன்படுத்தலாம் சூப்பராக சுவையாக இருக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

Food

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: