/indian-express-tamil/media/media_files/d7N2TaafgNl0ALEzmXgp.jpg)
பொதுவாக, பலகாரங்கள் மீந்துவிட்டால் அவற்றை என்ன செய்வதென்று தெரியாமல் சில சமயம் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால், உளுந்த வடை போன்ற பலகாரங்களை வைத்து சுவையான, புதுவிதமான உணவுகளைத் தயார் செய்யலாம். அப்படி ஒரு அருமையான, கொத்து பரோட்டாவுக்கு இணையான சுவை தரும் வடை கொத்து எப்படி செய்வது என்று செஃப்ஷாஞித் இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
மீந்து போன உளுந்த வடை
பெரிய வெங்காயம்
தக்காளி
இஞ்சி பூண்டு விழுது
பச்சை மிளகாய்
கரம் மசாலா
மிளகாய் தூள்
மஞ்சள் தூள்
மல்லித்தூள்
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை
எண்ணெய்
உப்பு
செய்முறை:
முதலில், மீந்து போன உளுந்த வடைகளை சிறிய துண்டுகளாக உதிர்த்து அல்லது கைகளாலேயே நொறுக்கிக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பிறகு, நறுக்கிய தக்காளியை சேர்த்து அது மசியும் வரை நன்கு வதக்கவும். இப்போது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், மற்றும் கரம் மசாலா ஆகியவற்றைச் சேர்த்து, மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை நன்கு கிளறவும். தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து மசாலா கிரேவி போல வர விடவும்.
கிரேவி நன்கு கொதித்ததும், நொறுக்கி வைத்துள்ள உளுந்த வடை துண்டுகளை சேர்த்து, மசாலா வடையுடன் நன்கு கலக்கும்படி கிளறவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, மசாலா வடையுடன் சேர்ந்ததும் அடுப்பை அணைக்கவும். கடைசியாக, நறுக்கிய கொத்தமல்லி இலைகளை மேலே தூவி இறக்கினால், சுவையான கொத்து வடை தயார். இந்த சுவையான கொத்து வடையை அப்படியே சாப்பிடலாம் அல்லது சப்பாத்தி அல்லது தோசைக்கு தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம். ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.