சர்க்கரை நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை குறைக்க இந்த இட்லியை காலை உணவாக சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
கோதுமை ரவை- ஒரு கப்
உளுந்தம் பருப்பு – கால் கப்
உப்பு – தேவையான அளவு
செய்முறை: உளுந்தம் பருப்பை நன்றாக கழிவி 4 மணி நேரம் ஊறவைக்கவும். தொடர்ந்து கோதுமை ரவையை தனியாக ஊற வைக்க வேண்டும். முதலில் உளுந்தம் பருப்பை நன்றாக அரைக்க வேண்டும். மாவு பதத்திற்கு வந்ததும், கோதுமை ரவையை சேர்த்து சுமார் 3 நிமிடங்கள் வரை அரைக்க வேண்டும். தொடர்ந்து 7 மணி நேரம் இந்த மாவை புளிக்க வைக்க வேண்டும் . அதன் பிற்கு இட்லி ஊற்றி சாப்பிடலாம். இது சர்க்கரை நோயாளிகளுக்கான நல்ல உணவு