உடல் எடையை குறைப்பது அவ்வளவு எளிமையான விஷயமல்ல. கிட்டதட்ட சில வருடங்கள் வரை உடல் எடையை குறைக்க தேவைப்படலாம்.
குறிப்பாக உணவுக் கட்டுப்பாடு மிகவும் முக்கியம். இந்நிலையில் வெயில் காலத்தில் உணவு செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம். இந்நிலையில் நாம் பச்சை காய்கறிகளை நமது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கோவைக்காயில் வைட்டமின்கள், நார்சத்து போன்ற முக்கிய சத்துக்கள் இருக்கிறது. இது ரத்தத்தை சுத்திகரிக்கிறது. சதைகள் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது. மேலும் ரத்தத்தை சுத்திகரிக்கிறது.
இந்நிலையில் கோவைக்காயில் குறைந்த கலோரிகளே உள்ளது. இதனால் எடை போடாது. கோவைக்காய்யை வைத்து பொரியல் செய்து சாப்பிடலாம். பச்சடி செய்தும் சாப்பிடலாம். மேலும் சாலட் செய்து சாப்பிடலாம்.
சர்க்கரை நோய்யை கோவைக்காய் கட்டுபடுத்த உதவும், பரம்பரை நோயாக சர்க்கை நோய் வரும் அபாயம் இருந்தால், 35 வயது முதலே கோவைக்காய்யை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்படி செய்தால் சர்கக்ரை நோய் ஏற்படாது.
கோவைக்காய் தொடர்ந்து சாப்பிட்டால் வாய்ப்புண் வராமல் தடுக்கும். இதன் தண்டு மற்றும் இலை வைத்து கஷாயம் செய்தால், அது சளி மற்றும் சுவாஸிப்பதில் சிக்கல் இருந்தால், அதை குணப்படுத்தும்.
கோவைக்காயில் வாயுத் தொல்லை, ரத்த போக்கு, வயிற்றில் பூச்சி ஆகியவற்றுக்கு தீர்வாக இருக்கும். இதன் இலையால் செய்யப்படும் சாறு மலச்சிக்கலை தடுக்கும்.
மேலும் கோவைக்காயில் வீக்கத்தை எதிர்க்கும் பண்பு மற்றும் செல்கள் சேதமடைவதை தடுக்கும் பண்பு இருப்பதால், இதயத்தின் ஆரோக்கியத்திற்கு உதவுகியாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“