கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்... பால் சேர்த்த சாஃப்ட் கொழுக்கட்டை: ஈஸி டிப்ஸ்

கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷலாக பால் சேர்த்த கொழுக்கட்டை எப்படி சுவையாக செய்வது என்று பார்ப்போம். இது சாஃப்ட் ஆகவும் எல்லோருக்கும் பிடித்த மாதிரி இப்படி செய்து பாருங்கள்.

கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷலாக பால் சேர்த்த கொழுக்கட்டை எப்படி சுவையாக செய்வது என்று பார்ப்போம். இது சாஃப்ட் ஆகவும் எல்லோருக்கும் பிடித்த மாதிரி இப்படி செய்து பாருங்கள்.

author-image
WebDesk
New Update
kozhuka

கிருஷ்ண ஜெயந்தி என்றாலே பலவிதமான பலகாரங்கள் நினைவுக்கு வரும். அதில் பால் கொழுக்கட்டைக்கு ஒரு தனி இடம் உண்டு. இந்த இனிப்பான மற்றும் சுவையான பால் கொழுக்கட்டையை மிக எளிதாகவும், விரைவாகவும் வீட்டில் எப்படி செய்வது என்றுபவிஸ்டுடியோஇன்ஸ்டாபக்கத்தில்கூறியிருப்பதுபற்றிபார்ப்போம்.

தேவையானபொருட்கள்:

அரிசி மாவு - 2 கப்

வெல்லம் - 2 கப்

தண்ணீர் - 2 கப் (மாவு பிசைய ஒரு கப், வெல்லம் பாகு தயாரிக்க ஒரு கப்)

தேங்காய் பால் - 1 கப்

சுக்கு (உலர்ந்த இஞ்சி) - ஒரு சிறிய துண்டு

உப்பு - ஒரு சிட்டிகை (விருப்பப்பட்டால்)

செய்முறை:

Advertisment

முதலில், ஒரு பெரிய பாத்திரத்தில் இரண்டு கப் அரிசி மாவு எடுத்துக்கொள்ளவும். மாவில் கட்டி இல்லாமல் இருப்பதற்கு, நன்கு கொதித்த வெந்நீரை மாவில் ஊற்றி, கரண்டியால் நன்கு கிளறவும். மாவு சற்று ஆறிய பிறகு, அதனை கைகளால் தொட்டுப் பார்க்கும் பதத்தில் இருக்கும்போது, மென்மையான மாவு உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் வைக்கவும். இந்த உருண்டைகள் அனைத்தும் சமமான அளவில் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. சின்னஞ்சிறு உருண்டைகளாக இருந்தால் போதும்.

அடுத்து, ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் வெல்லத்துடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து சூடாக்கவும். வெல்லம் முழுவதுமாக கரைந்து, பாகு கொதிக்க ஆரம்பித்தவுடன், அடுப்பை அணைத்து, பாகை வடிகட்டி எடுத்து வைக்கவும். வடிகட்டுவதன் மூலம் வெல்லத்தில் உள்ள மண் மற்றும் தூசுகள் நீக்கப்படும்.இப்போது ஒரு பெரிய பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும். தண்ணீர் கொதித்தவுடன், நாம் உருட்டி வைத்திருக்கும் அரிசி உருண்டைகளை மெதுவாக அதில் போடவும். உருண்டைகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்க, சிறிது நேரம் மெதுவாக கிளறிவிடலாம். சுமார் 10 நிமிடங்கள் கொதிக்கவிட்டு, உருண்டைகள் வெந்து, மென்மையாக மாறும்போது அடுத்த படிக்கு செல்லலாம்.

கொழுக்கட்டை உருண்டைகள் வெந்ததும், வடிகட்டி வைத்த வெல்லப்பாகை அதனுடன் சேர்த்து, கலவை நன்கு கொதிக்கும் வரை காத்திருக்கவும். இந்த நேரத்தில், சுவையை அதிகரிக்க ஒரு சிறிய துண்டு சுக்கு (இஞ்சி) அல்லது ஏலக்காயை பொடியாக்கி சேர்க்கலாம். பிறகு, ஒரு கப் தேங்காய் பாலை அதனுடன் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்துவிடவும். தேங்காய் பால் சேர்த்த பிறகு அதிக நேரம் கொதிக்கவிடக் கூடாது. இப்போது, சுவையான பால் கொழுக்கட்டை தயாராக உள்ளது. இந்த கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த எளிமையான செய்முறையை முயற்சி செய்து, உங்கள் குடும்பத்தினருடன் கொண்டாடுங்கள்.

Cooking Tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: