/indian-express-tamil/media/media_files/2025/07/14/thattai-2025-07-14-18-46-26.jpg)
கிருஷ்ண ஜெயந்தி போன்ற பண்டிகைகளில், வீட்டிலேயே பாரம்பரியமான தட்டையை எளிதாகவும் சுவையாகவும் செய்யலாம். இந்த செய்முறையைப் பின்பற்றி, மொறுமொறுப்பான தட்டையைத் தயார் செய்யலாம். இதை எப்படி செய்யலாம் என்று காத்துவாக்குல சமையல் இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்க்கலாம். இந்த தட்டையை ஒரு வாரம் வரை சேமித்து வைத்து சாப்பிடலாம். கொஞ்சம் கூட மொறுமொறுப்பு தன்மை மாறாமல் அப்படியே இருக்கும்.
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு: 2 கப்
கடலைப்பருப்பு: ஊற வைத்தது
சீரகம்: தேவையான அளவு
உப்பு: தேவையான அளவு
மஞ்சள் தூள்: சிறிதளவு
தனி மிளகாய்த்தூள்: தேவையான அளவு
பெருங்காயத்தூள்: சிறிதளவு
வெண்ணெய்: 2 ஸ்பூன் (உருகாதது)
தண்ணீர்: வெதுவெதுப்பானது
பொரிக்க எண்ணெய்: தேவையான அளவு
செய்முறை:
முதலில், ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, ஊறவைத்த கடலைப்பருப்பு, சீரகம், உப்பு, மஞ்சள் தூள், தனி மிளகாய்த்தூள், மற்றும் பெருங்காயத்தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும். அதன் பிறகு, உருகாத வெண்ணெய் இரண்டு ஸ்பூன் சேர்த்து, அனைத்துப் பொருட்களும் நன்றாகக் கலக்கும்படி பிசையவும்.
பிறகு, வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, அந்த மாவை 10 நிமிடங்கள் ஊற விடவும். ஒரு பிளாஸ்டிக் கவரில் எண்ணெய் தடவி, பிசைந்து வைத்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, மத்தை வைத்து மெதுவாக அழுத்தவும். தட்டையான வடிவத்திற்கு வந்த பின், ஒரு முட்கரண்டியைப் பயன்படுத்தி, தட்டையின் மீது ஓட்டைகள் போடவும். இது, தட்டை சீராகப் பொரிந்து மொறுமொறுப்பாக மாற உதவும்.
இறுதியாக, ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, மிதமான தீயில் சூடாக்கவும். ஓட்டைகள் போட்ட தட்டைகளை சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். தட்டையைச் சுற்றி எழும் சலசலப்பு அடங்கியதும், அதை எண்ணெயில் இருந்து வெளியே எடுத்தால் மொறுமொறுப்பான தட்டை தயார். இந்த எளிய செய்முறையின் மூலம், கிருஷ்ண ஜெயந்திக்கு வீட்டிலேயே சுவையான தட்டை செய்து மகிழலாம். இதை பிள்ளைகளுக்கு ஸ்கூலுக்கு ஸ்நாக்ஸ் ஆக கொடுத்து விடலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.