நாம் வழக்கமாக குருமா செய்வோம், ஆனால் சிறிதும் எண்ணெய் இல்லாமல் நம்மால் குருமா செய்ய முடியும். இதனால் நீங்கள் அடிக்கடி இந்த ரெசிபியை வீட்டில் செய்து பார்க்க முடியும்.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு
பீன்ஸ்,
தக்காளி
பச்சை மிளகாய்
வெங்காயம்
பச்சை பட்டாணி
கேரட்
துருவிய தேங்காய்
இஞ்சி, பூண்டு விழுது
சோம்பு
முந்திரி
கசகசா
செய்முறை :
வெங்காயம், பச்சை பட்டணி, கேரட், பீன்ஸ் மற்றும் உருளைகிழங்கு ஆகியவற்றை நன்றாக நறுக்கி கொள்ளவும். பின்பு அதில் தேவைகேற்ப தண்ணீர் ஊற்றி குக்கரில் வேக வைக்க வேண்டும். முழுதாக வேக வைக்க கூடாது. பாதி வெந்தால் போதும். இப்போது துருவிய தேங்காய், கசகசா, சோம்பு, முந்திரி ஆகியவற்றை சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். தற்போது குக்கரை திரந்து இந்த கலவையை அதில் ஊற்ற வேண்டும். மேலும் அத்துடன் உப்பு, மிளகாய்தூள், கரம் மசாலா சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பச்சை வாசனை போகும் வரை காத்திருந்த பிறகு மீண்டும் ஒரு விசில் விட்டு எடுக்க வேண்டும்.