வாயுத் தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு, பூண்டு போட்ட காரக்குழம்பு ஒரு சிறந்த தீர்வாக அமையும். சரியான முறையில் தயாரிக்கப்படும் பூண்டு மிளகுக்குழம்பு, சுவையாக இருப்பதுடன், செரிமானத்திற்கும் துணைபுரியும். இங்கே ஒரு எளிய மற்றும் பயனுள்ள காரக்குழம்பு செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது, இது வாயுத் தொல்லையைக் குறைக்க உதவும். இதனை எப்படி செய்வது என்று கார்த்திஸ் குக்புக்ஸ் இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
தனியா (கொத்தமல்லி விதை) - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கருப்பு மிளகு - 1 டேபிள்ஸ்பூன்
வர மிளகாய் - 6
வெந்தயம் - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை
நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கருப்பு மிளகு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
வெங்காய வடகம் - 1 டேபிள்ஸ்பூன்
பூண்டு பற்கள் - 25
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - 3
கல்லுப்பு - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 முதல் 1.5 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை
புளி
வெல்லம்
செய்முறை:
ஒரு வாணலியில் கடலைப்பருப்பு, தனியா, சீரகம், கருப்பு மிளகு, வர மிளகாய், வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை தனித்தனியாகவோ அல்லது சேர்த்தோ பொன்னிறமாக (கருக விடாமல்) வறுக்கவும். வறுத்த பொருட்களை ஆறவைத்து, மிக்ஸியில் போட்டு நைசாக பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் 3 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும், 1 டீஸ்பூன் கடுகு சேர்த்து வெடிக்க விடவும். கடுகு வெடித்ததும், 1 டீஸ்பூன் சீரகம், 1 டீஸ்பூன் கருப்பு மிளகு, கால் டீஸ்பூன் வெந்தயம் மற்றும் விருப்பப்பட்டால் 1 டேபிள்ஸ்பூன் வெங்காய வடகம் சேர்த்து தாளிக்கவும்.
25 பூண்டு பற்களை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். பின்னர் 15 சின்ன வெங்காயம் சேர்த்து 2-3 நிமிடங்கள் பொன்னிறமாக வதக்கவும். நறுக்கிய 3 தக்காளியைச் சேர்த்து, 1 டேபிள்ஸ்பூன் கல்லுப்பு சேர்த்து, தக்காளி குழம்பு பதம் வரும் வரை வதக்கவும். 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 முதல் 1.5 டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறவும். சிறிது கறிவேப்பிலையைச் சேர்த்து, மசாலா வாசம் வரும் வரை 1 நிமிடம் வதக்கவும்.
எலுமிச்சை அளவு புளியிலிருந்து கெட்டியான சாற்றை (குறைந்த நீர் சேர்த்து) எடுத்துக் கொள்ளவும். புளியின் புளிப்புத்தன்மைக்கு ஏற்ப பாதியளவு புளிக்கரைசலை முதலில் சேர்க்கவும். பின்னர் அதனுடன் 1 கிளாஸ் தண்ணீர் சேர்த்து, குழம்பு கெட்டியான பதம் வரும் வரை கொதிக்க விடவும்.
இறுதியாக, அரைத்து வைத்துள்ள 1 டேபிள்ஸ்பூன் பொடியை சேர்க்கவும். நன்கு கிளறிய பின், 1 சிறிய துண்டு வெல்லம் அல்லது அரை டேபிள்ஸ்பூன் வெல்லப் பொடியைச் சேர்த்து கரைக்கும் வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். சுவையான காரக்குழம்பு தயார். இதை சாதம், இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்துப் பரிமாறலாம்.