சுவையான மொறு மொறு வெண்டைக்காய் பக்கோடா செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வெண்டைக்காய் – ¼ கிலோ
கரம் மசாலா – ½ டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 5
பூண்டு – 5 பல்
மல்லி துாள் – 1 டீஸ்பூன்
மைதா மாவு – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் துாள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் துாள் – ½ டீஸ்பூன்
கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி பருப்பு – 10
சீரக துாள் – ½ டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
வெண்டைக்காயை நன்றாக கழுவி, நீர் துடைத்து விட்டு, சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். முந்திரி பருப்பு அரை மணி நேரம் நீரில் ஊற வைக்கவும். இப்போது ஒரு
பாத்திரத்தில் உப்பு, மிளகாய் துாள், மஞ்சள் துாள், கரம் மசாலா, மல்லித் துாள், சீரகத் துாள் சேர்த்து தண்ணீர் தெளித்து கலக்கவும். அடுத்து பச்சை மிளகாய், நீரை வடித்து விட்டு முந்திரி, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து கலந்த பின், கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, மைதா மாவு சேர்த்து, பக்கோடாவிற்கு பிசைவது போல மாவு பிசையவும்.
அதன் பின், நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து பிரட்டி சில நிமிடங்கள் ஊற விடவும். இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான தீயில் வைத்து வெண்டைக்காயை போட்டு எடுக்கவும். பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும். அவ்வளவு தான் மொறு மொறு வெண்டைக்காய் பக்கோடா ரெடி. தயர் சாதம், சாம்பார் உடன் சேர்த்து சாப்பிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“