வழக்கம் போல் லெமன், தேங்காய், புளியோதரை சாப்பிட்டு உங்களுக்கு நிச்சயம் சலித்திருக்கும் . இந்நிலையில் வெண்டைக்காய் வைத்து ஒரு கலவை சாதத்தை நாம் எப்படி செய்யலாம் என்பதை தெரிந்துகொள்வோம்.
தேவையான பொருட்கள்
வெண்டைக்காய், உப்பு, சாம்பார் பொடி, புலி கரைத்தது, உளுந்த பருப்பு, கொத்தமல்லி, கடுகு, எண்ணெய், முந்திரி பருப்பு, கருவேப்பில்லை, மிளகாய், கருவேப்பிலை, வெங்காயம்.மஞ்சள் பொடி, சாதம்
செய்முறை
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து வதக்கவும். நன்றாக பொன்னிறமாக வறுக்க வேண்டும். இதை தனியாக எடுத்துவைத்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, கருவேப்பில்லை, மிளகாய்யை கிள்ளி போட வேண்டும். தொடர்ந்து அதில் சாதம் சேர்த்து கிளறி. அத்தோடு மஞ்சள் தூள், கரைத்த புலி ஆகியவற்றை சேர்க்க வேண்டும். சிறிது நேரம் கழித்து அதில் சாம்பார் பொடி சேர்த்து கலக்க வேண்டும். தொடர்ந்து அதில் வறுத்த வெண்டைக்காய்யை சேர்த்து வதக்க வேண்டும். 10 நிமிடங்கள் மூடி வைத்துவிடுங்கள் சுவையான வெண்டைக்காய் சாதம் ரெடி.