/tamil-ie/media/media_files/uploads/2022/10/New-Project7.jpg)
உணவு எல்லோருக்கும் பிடித்தமானது. ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கத்துடன் இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியம் முக்கியமானது. விதவிதமான உணவுகளை சாப்பிட வேண்டும் என நினைப்போம். அதே சமயம் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. அந்த வகையில் வீட்டிலே இரவு உணவு, காலை உணவுக்கு ஏற்றது போல் சுவையான அடை தோசை செய்து சாப்பிடலாம். தேங்காய் சட்னி உடன் சேர்த்து கூட இதை சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
ரவை - 1 கப்
அரிசி மாவு - 2 டீஸ்பூன்
தயிர் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சீரகம் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1
கறிவேப்பிலை , கொத்தமல்லி - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
கேரட் துருவல் - 1 கைப்பிடி
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை
முதலில் பாத்திரத்தில் ரவை , அரிசி மாவு, தயிர் கலந்து பிசைய வேண்டும். அடுத்து தேவையான அளவு உப்பு சேர்த்து, தோசை ஊற்றும் பதத்திற்கு தண்ணீர் கலந்து மாவு பிசைய வேண்டும்.
பின் சீரகம், வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய், கேரட் துருவல், கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பதம் வந்த பிறகு, கொஞ்சம் கெட்டியாக மாவு கரைக்க வேண்டும். அடுத்து தோவை கல் வைத்து ஒரு கரண்டி மாவு ஊற்றி கெட்டியாக ஊற்றி, எண்ணெய் சேர்த்து வேகவைத்து எடுக்க வேண்டும். அவ்வளவு தான் ரவை அடை தயார். தேங்காய் சட்னி உடன் சேர்த்து பரிமாறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.