பாயாசம் பலருக்கும் பிடிக்கும். வழக்கமாக சேமியா பாயாசம், பருப்பு பாயாசம் என்று குறிப்பிட்ட வரையறைக்குள் முடிந்துவிடும். ஆனால் நட்ஸ் பாயாசம் சற்று வித்தியாசமானது. பாதாம், பிஸ்தா, முந்திரி சேர்ப்பதால் ஆரோக்கியம் நிறைந்ததாக உள்ளது. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.
நட்ஸ் பாயாசம் எப்படி செய்வது என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பாதாம் - 20 கிராம்
பிஸ்தா - 20 கிராம்
முந்திரி - 20 கிராம்
திராட்சை மற்றும் பேரிச்சை - 20 கிராம்
பால் - 1/2 லிட்டர்
சேமியா - 1/4 கப்
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை
சர்க்கரை - 1/4 கப்
நெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் பாதாம் , பிஸ்தா, முந்திரி என அனைத்தையும் தனித்தனியே நெய்யில் வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
சேமியாவையும் வறுத்துக்கொள்ள வேண்டும். பின் பால் காய்ச்சி அது நன்கு கொதித்ததும் சேமியா சேர்த்து கிளற வேண்டும். அடுத்து அடுப்பை அணைத்துவிட்டு தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கலக்க வேண்டும். பின் வறுத்து எடுத்து வைத்த பாதாம், பிஸ்தா, முந்திரி திராட்சை , பேரிட்சை சேர்த்து கலந்துவிடுங்கள். அவ்வளவுதான் நட்ஸ் பாயாசம் தயார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil